செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தொடரூந்துடன் மோதி யானை உயிரிழப்பு..!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலக்கம் 943 தபால் ரயில், இன்று (17.02.2026) அதிகாலை கித்துல்உத்துவ 151ஆவது மைல்கல் அருகே காட்டு யானையுடன் மோதி தடம் புரண்டது.

இந்த விபத்தில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

காட்டு யானை தொடரூந்தின் இயந்திரத்தில் மோதியதுடன், அதன் காலின் ஒரு பகுதி இயந்திரத்தில் சிக்கியதன் காரணமாகவே ரயில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கவுடுல்ல வனப்பகுதியிலிருந்து சோமாவதிய வனப்பகுதிக்கு தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானை சுமார் 15 வயதுடையது எனவும், அது சுமார் 7 அடி உயரம் கொண்டது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp