இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் எதிர்கால போக்கை தீர்மானிக்கும் “தேசிய ஏற்றுமதிப் பாதை வரைபடம்: நிறைவேற்று அதிகாரிகள் மன்றம் (“National Export Roadmap: The CEO Forum)” என்ற மூலோபாய அலகு நேற்று (04.03.2026) ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துந்நெத்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாட்டின் தனியார் துறையின் முன்னணித் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் 2025 ஆம் ஆண்டில் ஏற்றுமதி முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்துஇ 2026 மற்றும் அதற்குப் பிந்தைய காலத்திற்கான மூலோபாய இலக்குகள் குறித்து பொதுவான இணக்கப்பட்டை எட்டினர்.


