உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலை புலிகள் உட்பட 15 அமைப்புகளுக்கு தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் குறித்த அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

தமிழர் புனர்வாழ்வு அமைப்பு,

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு,

உலக தமிழர் இயக்கம்,

நாடு கடந்த தமிழீழ அரசு,

உலக தமிழர் நிவாரண நிதியம்

கனேடிய தமிழர் தேசிய அவை

தமிழ் இளைஞர் அமைப்பு,

எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு,

சேவ் த பேர்ள்ஸ்

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு,

ஜமாதே மிலாதே இப்ராஹிம் அமைப்பு,

விலயாத் அஸ் செயிலானி,

டருள் ஆதர் அத்தபவியா,

இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம்

உள்ளட்ட 15 அமைப்புகள் தடைசெய்ய்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 222 தனிநபர்களின் பெயர் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp