கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய முன்னுரிமைகள் பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் சமநிலை குறைபாடுகளை குறைக்கவும், மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது பாதுகாப்பு உறுதி செய்யவதகவும் இருக்க வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்;சருமான கலாநிதி; ஹரிணி அமரசூரியா,
தெரிவித்தார்.
நேற்று நடத்தப்பட்ட கல்வி டிஜிட்டல் வழிகாட்டல் தொடக்க விழாவில் அவர் பேசுகையில், முறையான டிஜிட்டல் வசதிகள் இல்லாத பாடசாலைகள் அடையாளம் கண்டு, அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பi வழங்க வழி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், தொழில்நுட்பத்தை குழந்தைகளுக்கு பாதுகாப்பான, நண்பராகக் கருதும் முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீன அரசின் நிதி ஆதரவுடன் நடைபெறும் இந்த திட்டத்தில் தேசிய கல்வி கிளவுட் அமைப்பு, தொலைதூர கல்வி வசதிகள் மற்றும் சுமார் 900 ஏ.ஐ செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
