உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக வளாக காவலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 34 வயதுடைய காவலர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கிளிநொச்சி மாவட்ட தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையிலே கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp