செய்திகள் விளையாட்டு

ஓய்வு பெற்ற வீரர்களுக்கான கிரிகெட் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது

ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியுள்ளது

ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இதில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன.

நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 41 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

அவரது ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.

அந்த அணி 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ஓட்டங்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 116 ஓட்டங்கள்; எடுத்தார்.

இதில் 15 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும்.

அதிரடி துடுப்பாட்ட வீரரான டிவில்லியர்ஸ் தனது 41-வது வயதிலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்