நாட்டில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள் இன்று முதல் அமலில் வந்துள்ளன.
அதன்படி, ஒரு லிட்டர் ஆட்டோ டீசல் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 277 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெட்ரோல் விலையும் லிட்டருக்கு 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 292 ரூபாவாக ஆக மாற்றப்பட்டுள்ளது.
மற்ற அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
