உலகம் செய்திகள்

ஈரான் மீதான இன்று காலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.


ஈரான் மீது இன்று காலை தாக்குதல் தொடுத்த இஸ்ரேல் இராணுவம், தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

‘இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதில் நடத்தி முடித்து விட்டதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாகவும் இதன் மூலம், இஸ்ரேல் மக்களுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்; எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்