இந்திய நிதியுதவியின் கீழ் இலங்கையின வடக்கு ரயில்வே பாதையின் முழுமையான மறுசீரமைப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
‘டிட்வா’ சூறாவளி காரணமாக ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட கடுமையான சேதங்களை சரிசெய்யும் நோக்கில் இந்த மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்காக இந்திய அரசின் நிதியுதவியிருந்து சுமார் 50 இலட்சம் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் காரணமாக, எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் குருநாகல் மாவட்ட மாகோ சந்தியிலிருந்து ஓமந்தை வரையிலான ரயில் சேவைகள் வரையறுக்கப்பட்ட முறையில் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
