உள்ளூர் செய்திகள்

அரசாங்கம் ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி-ஓமல்பே சோபித்த தேரர்

அரசாங்கம் ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி வழங்கி, அதற்காக 66 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளதாக ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “போதைப்பொருள் அடிமையாதல் மற்றும் கடத்தலைத் தடுக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னெடுத்துள்ள ‘ரட்ட எக்கட்ட’ (Ratama Ekata) திட்டம் மிகச் சிறந்த ஒரு முயற்சியாகும்.

இது எதிர்கால தலைமுறைகளுக்காக எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானம். ஆனால் அதே சமயம், 66 ஏக்கர் நிலம் ஆறு நிறுவனங்களுக்கு கஞ்சா பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.”

“1929ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க ‘அபீயம் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம்’ இன்னும் அமுலில் உள்ளது.

அந்தச் சட்டத்தின் கீழ் கஞ்சாவை வளர்ப்பதும், வைத்திருப்பதும், இறக்குமதி செய்வதும் தடை செய்யப்பட்டவை,” என அவர் நினைவூட்டினார்.

முன்னாள் பிரதி அமைச்சரான டயானா கமகே முன்மொழிந்த கஞ்சா பயிரிடும் கொள்கை, முன்னாள் அரசாங்கம் தோல்வியுற காரணமான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததாக சோபித்த தேரர் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், “அரசாங்கம் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் கொள்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மேலும், இந்தத் தீர்மானம் உண்மையில் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கான முழுமையான ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

அதுடன், “அரசாங்கத்தின் கஞ்சா ஏற்றுமதி திட்டம் தோல்வியடைந்தால் அதன் உற்பத்திப் பொருட்களுக்கு என்ன ஆகும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp