செய்திகள்

வவுனியாவில் அரசியல் கைதிகளுக்காக கையெழுத்துப் போராட்டம்

  • Dec 28, 2024 - 06:00 PM
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியே கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையத்துக்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மதத் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.  

உள்ளூர் செய்திகள்

ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு.

  • Dec 26, 2024 - 01:41 AM
  • 0 Comments

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட  முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா

  • Dec 25, 2024 - 01:44 AM
  • 0 Comments

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும், மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலூக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இணங்கிய பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதும், கடன் மதிப்பீட்டை உயர்த்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கி இதனைக் குறிப்பிட்டிருந்தார். Fitch Ratings இலங்கையின் கடன் மதிப்பீட்டை […]

செய்திகள்

சித்திரை புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது- உதய கம்மன்பில

  • Dec 23, 2024 - 09:33 PM
  • 0 Comments

மார்ச் – ஏப்ரல் வரையான காலப்பகுதியில் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதால் மே மாதமளவில் தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி […]

செய்திகள்

ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினர் இல்லை- டக்ளஸ் தேவானந்தா

  • Dec 21, 2024 - 07:58 PM
  • 0 Comments

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை வரவேற்பதாக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் இவ்வாறான செயலணிகளில் இலங்கையின் பல்லினத் தன்மை அவசியம் என அவர் வலியறுத்தினார் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியில், சிறுபான்மையினத்தவர்களின் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லையென சுட்டிக்காட்டி, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள 18 பேர் அடங்கிய இக்குழுவில் சிறுபான்மை இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

செய்திகள்

இந்திய எண்ணெய் குழாய் செய்தி தவறானது- அமைச்சர் விஜித ஹேரத்

  • Dec 20, 2024 - 11:39 AM
  • 0 Comments

அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, நாட்டில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

செய்திகள்

சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமையை உறுதிப்படுத்த வேண்டும். அமைச்சரவை பேச்சாளர்

  • Dec 19, 2024 - 09:24 PM
  • 0 Comments

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டம் போலியானதல்ல. ஆனால் அவரால் தற்போது அதனை நிரூபிக்க முடியாதுள்ளது. அதன் காரணமாகவே அவர் பதவி விலகினார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமையை நிரூபிக்குமாறு மாத்திரமே சவால் விடுக்கப்பட்டது. அவர் தனது பிறப்பு பதிவு சான்றிதழை சமர்ப்பித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில் சபை அமர்வின் போது அவர் சான்றிதழை காண்பித்திருந்த போதிலும், ஹன்சாட்டில் உள்வாங்குவதற்காக அவர் அதனை சமர்ப்பிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் தனது சான்றிதழை சமர்ப்பித்ததன் பின்னர் […]

உள்ளூர் செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • Dec 17, 2024 - 02:42 AM
  • 0 Comments

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை […]

உள்ளூர் செய்திகள்

தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

  • Dec 15, 2024 - 03:29 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் […]

செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விவகாரம் இழுபறியில் உள்ளது- அமைப்பாளர்

  • Dec 9, 2024 - 06:44 AM
  • 0 Comments

கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட்டால் மட்டுமே ;கத்துடன் போட்டியிட முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் பெற்றுக் கொண்ட மொத்த வாக்கு வீதத்துக்கு அமைய ஐந்து தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் மாத்திரம் குறிப்பிடப்பட்;டதுமிகுதி தேசிய பட்டியல் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp