செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து குற்றவாளிகளை தப்பவிட்ட பொலிஸார்

  • Jan 18, 2025 - 03:33 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (17) பொலிஸார் சுற்றிவளைத்தனர் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பியோடினர் சந்தேக நபர்களை கலைத்து பிடிக்க முடியாத பொலிஸார் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 14 பெரல் கோடாவை மடடுமே கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

– வடக்கில் காணாமல் போனவர்களினால் நாம் பாதிக்கப்ட்டதனைப் போல தெற்கிலும் சிங்கள தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக லீலாதேவி ஆனந்த நடராஜா ஜெனிவாவில் தெரிவிப்பு

  • Jan 17, 2025 - 09:02 PM
  • 0 Comments

நாட்டின் ஏனைய பாகங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தன் பின்னரேயே, எமது அன்புக்குரியவர்கள் காணாமல்போனதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும், மாறாக அவர்களும் போரில் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டோம் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு எதிராகப் போராடும் குழுவினால் முதன்முறையாக ஏற்பாடு […]

முக்கிய செய்திகள்

நாட்டில் தொடரூந்து; சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளது

  • Jan 17, 2025 - 01:37 PM
  • 0 Comments

தொடரூந்து; இயந்திர சாரதிகளின் பற்றாக்குறையினால் இன்று வெள்ளிக்கிழமை (17) பல தொடரூந்து; சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும், 42 சாரதிகள் மட்டுமே பணியில் உள்ளதாகவும் தொடரூந்து; திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக 68 தொடரூந்து; இயந்திர சாரதிகள் தேவை. எனினும் தற்போது 42 பேர் மட்டுமே பணிக்கு உள்ளனர். இவர்களில் 27 பேர் சுகயீன விடுமுறையில் உள்ளதாகவும் மேலும் 12 பேர் இரண்டு சேவைகளில் தங்களை ஈடுப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாக தொடரூந்து; சேவைகள் திணைக்களம் […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ் சி.ஐ.டி.யில் ஆஜர்

  • Jan 17, 2025 - 12:30 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் கஞ்சாவுடன் பிடிபட்ட விசுவமடு பெடியன்!

  • Jan 12, 2025 - 10:06 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியருகில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்வைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 37 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையும் படியுங்கள்>யோகாசன பயிற்சி செய்துகொண்டிருந்தவர் […]

முக்கிய செய்திகள்

பட்டப்பகலில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டுள்ளார், சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவிரிப்பு

  • Jan 12, 2025 - 05:27 PM
  • 0 Comments

கண்டி மாவட்டத்தின் கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்திச் செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சிறிய கறுப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இதில் […]

முக்கிய செய்திகள்

சிறிதரன் எம்பி வாக்குகளை பெறுவதற்காக துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார் என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் குற்றச்சாட்டு

  • Jan 11, 2025 - 07:04 PM
  • 0 Comments

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்வகிப்பது யார் என்ற சர்ச்சையினால் ஏற்பட்ட அமைதியின்மை சூழ்நிலையை பொலிஸார் தலையிட்டு கட்டுப்படுத்தினர். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்தபோது இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தலுக்காக 2016ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதான சுடரினை ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடரேற்றியதையடுத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், அங்கு தொடர்ந்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

  • Jan 10, 2025 - 11:45 PM
  • 0 Comments

மட்டக்களப்பு -கல்முனை பிரதான வீதியில் மூவர் காயமடைந்துள்ளனர். காத்தான்குடி ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் அலுவலகத்தை மக்கள் நம்பும் வகையில் மாற்ற வேண்டும் – தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர்

  • Jan 10, 2025 - 10:44 AM
  • 0 Comments

காணாமல்போனோர் அலுவலகம் உட்பட தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பொறிமுறைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கான பிரதியமைச்சர் முனீர்முலாபிர் தெரிவித்துள்ளார். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்றவற்றை முன்னைய அரசாங்கம் அரசியல் நியமனங்களிற்காக பயன்படுத்தியது என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் தற்போதைய அரசாங்கத்தின் இந்த பொறிமுறைகள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை உண்மையான நோக்கமாக கொண்டு செயற்படும் என குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் தற்போது மாறிவிட்டன,பத்துவருடங்களிற்கு முன்னர் காணப்பட்ட நிலை தற்போதில்லை,இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் […]

முக்கிய செய்திகள்

யாழில் விபத்து மோட்டார் 21 வயது இளைஞன் உயிரிழப்பு

  • Jan 9, 2025 - 01:40 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த வயது 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp