உள்ளூர்

ஜேவிபி அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது- சிவாஜிலிங்கம்

  • Dec 21, 2024 - 07:47 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமை ஊடாக தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்பதற்கு இந்தியா முயற்சிக்கின்றது ஜனாதிபதி அநுர இந்தியா சென்று இந்திய பிரதமருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அனைத்து தமிழ் தரப்பினுடைய கோரிக்கையாக இருந்து வருவது சமஸ்டி கோரிக்கையாகும். தற்போது இந்தியாவை சந்தித்த ஜனாதிபதி கூட அரசியல் உரிமை தொடரில் எந்த விதமான திட்டவட்டமான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு […]

செய்திகள்

அரச சேவையை வினைத்திறனானதாக மாற்ற வேண்டும்-ஜனாதிபதி அநுரகுமார

  • Dec 20, 2024 - 05:32 PM
  • 0 Comments

எமது நாட்டின் அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் கொழும்பில்; உள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த […]

உள்ளூர் செய்திகள்

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு- வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்.

  • Dec 20, 2024 - 02:49 AM
  • 0 Comments

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு […]

செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நீதியமைச்சர்

  • Dec 16, 2024 - 04:57 PM
  • 0 Comments

பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுயவிபரக் கோவையில் உறுப்பினர்களின் கல்வித் தகைமை மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.

உள்ளூர்

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா பிணையில் விடுதலை

  • Dec 16, 2024 - 04:52 PM
  • 0 Comments

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்; அருச்சுனாவுக்கும் சட்டத்தரணி என். கௌசல்யாக்கும் (தங்கம்) தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு கடமையாற்றிய வைத்தியர்களுக்கு இடையூறு விளைவித்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி […]

செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே 

  • Dec 15, 2024 - 11:14 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அநுரகுமார திசாநாயக்க, தற்போது ஜனாதிபதியானதன் பின்னர் அதனை மறந்துவிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த தீர்மானத்தை மீளப்பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் கொழும்பு மாவட்ட உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வரப்பிரசாதங்களை […]

உள்ளூர் செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை முன்வைக்க அவசியமில்லை!-ஐக்கிய மக்கள் சக்தி

  • Dec 15, 2024 - 11:14 AM
  • 0 Comments

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஒழுக்க நெறியை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவி விலகியுள்ள போதிலும் தமது கல்வித் தகைமை தொடர்பில் இதுவரையில் உரிய வகையில் அவர் விளக்கமளிக்கவில்லை எனவும்,பட்டங்களைப் பெற்றுள்ளதாகப் போலியான தகவல்களைச் […]

உள்ளூர் செய்திகள்

சபாநாயகரின் பதவி விலகல் கடித்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

  • Dec 15, 2024 - 03:05 AM
  • 0 Comments

சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தார். தனது கல்வித் தகுதி தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தற்போது அந்தத் தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தனது கல்வித்தகுதி தொடர்பாக எந்த […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு….! (காணொளி)

  • Dec 14, 2024 - 12:44 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சஜித் கையெழுத்திட்டார் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்து வழங்க நடவடிக்கை ரஷ்யா எமது அரசாங்கத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=DbQa20cTiGA

செய்திகள்

எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  • Dec 13, 2024 - 09:38 PM
  • 0 Comments

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது’ யாழ் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ் போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp