செய்திகள்

டிஜிட்டல் டிரெண்ட அர்ச்சுனா எம்.பியின் வழக்கு ஒத்திவைப்பு

  • Jan 22, 2025 - 06:51 PM
  • 0 Comments

நீதிமன்றத்தில் சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைக்கட்டது அதே வழக்கு மீண்டும் 3ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளப்டவுள்ளது ஒரு பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போது, அநுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரை ‘அர்ச்சுனா லோச்சன்’ என்று பெயரிட்டனர். ஆனால் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என […]

செய்திகள்

பொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை-ஜனாதிபதி

  • Jan 22, 2025 - 09:28 AM
  • 0 Comments

பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றுகின்றவர்களின் இடமாற்றங்களை ஒழுங்கு கிரமமாக செய்வதற்கே பொலிஸ் ஆணைக்குழு உள்ளது. ஆனால் பொலிஸ் ஆணைக்குழுவும் இழுத்தடிப்பு செய்கிறது. பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே சில இடமாற்றங்களை கோருகின்றோம் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆனால் ஆணைக்குழு அதனை சரியாக செய்யவில்லையென தெரிவித்துள்ளது இந்த நாட்டை போதைப்பொருள் மற்றும் பாதாளா உலகக்குழுக்களிடமிருந்து கட்டம் கட்டமாக மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளார் ;அதேபோன்று திருடர்களை பிடிக்கவில்லையா என சிலர் எம்மிடம் வினவுகின்றனர்? அவர்களை சிறையில் அடைக்க முடியாத எனக் […]

முக்கிய செய்திகள்

பாராளுமன்ற விவாதம் எதற்காக என் புரிந்துகொள்ளாதவர்களே இப்போது எதிர்க்கட்சியாக இருக்கின்றார்கள்- பிரதமர் ஹரினி

  • Jan 22, 2025 - 05:28 AM
  • 0 Comments

மக்களை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் முன்னர் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை விளங்கிக்கொள்ள முடியாதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். Clean Sri Lanka  வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் இரண்டு நாள் விவாதத்தின் முதல் நாளில் (21) கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் பாராளுமன்றம் கூடிய நாளிலிருந்து இந்த எதிர்க்கட்சியின் பொறுப்புக்கள் என்ன என்றும், இந்த எதிர்க்கட்சி எந்த […]

முக்கிய செய்திகள்

மன்னாரில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

  • Jan 20, 2025 - 02:43 PM
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு தொடரூந்து கடவைக்கருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள்

கொழும்பு மொரட்டுவவில் பொலிஸார் மீது தாக்குதல் பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

  • Jan 20, 2025 - 06:02 AM
  • 0 Comments

100க்கும் மேற்பட்டோர் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால்கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அங்கு ஒரு பதற்றமான சூழல் காணப்படுகின்றது. மொரட்டுவ பகுதியில் உள்ள சிலரை கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப் பிரதேச மக்கள் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் மின்பந்தல் கட்டப்பட்டு வருவதாவும், இதனால் அங்கிருந்த ஒரு குழு வீதியை மறித்து செயற்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவர்களை […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு அரச வீடு இல்லை மாதம் 30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்- ஜனாதிபதி

  • Jan 20, 2025 - 05:47 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அரச இல்லத்தை அரசுடமையாக்குவோம். அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும். வேண்டுமாயின் மாத வாடகை செலுத்தி அவர் அங்கு வசிக்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை பகுதியில் நேற்று (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் […]

முக்கிய செய்திகள்

சீனாவுக்குள் இலங்கை சிக்கவில்லையென்கிறார் ஜனாதிபதி அநுர

  • Jan 19, 2025 - 05:12 PM
  • 0 Comments

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிராகரித்துள்ளார் உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம், வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக கருதுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சீனாவின் சின்ஹூவாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி […]

செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து குற்றவாளிகளை தப்பவிட்ட பொலிஸார்

  • Jan 18, 2025 - 03:33 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (17) பொலிஸார் சுற்றிவளைத்தனர் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பியோடினர் சந்தேக நபர்களை கலைத்து பிடிக்க முடியாத பொலிஸார் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 14 பெரல் கோடாவை மடடுமே கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ் சி.ஐ.டி.யில் ஆஜர்

  • Jan 17, 2025 - 12:30 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை (17) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்…!

  • Jan 15, 2025 - 01:38 PM
  • 0 Comments

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp