முக்கிய செய்திகள்

கொக்கட்டிச்சோலைப் படுகொலை 38 -ம் ஆண்டு நினைவு நாள்!

  • Jan 28, 2025 - 06:23 PM
  • 0 Comments

இன்றைய நாள் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளாகும். இலங்கையைப் பொறுத்தவரை சிறுபான்மை இனம் மீதான படுகொலை செய்ததில் கொலையாளிகளுக்கு இதுவரை சர்வதேசம், நீதித்துறை எந்தவிதத்திலும் தண்டித்ததும் இல்லை தமிழர் எப்பொழுதும் மற்றயவர் உரிமைகளை நசுக்குவதில் உடன்பாடற்ற சமூகம் என்பதால் என்னவோ தமிழினத்தை கொலை செய்வதில் மற்றைய இரு இனங்கள் தமிழின கொலையை பார்த்து சந்தோசம் அடைந்தார்கள். 1987ஆம் ஆண்டு பேரினவாத அரசாங்கங்களால் நடைபெற்ற கொலைக்கு தண்டனை வழங்கப்பட்டு இருந்தால் அதன் […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு வசிப்பதற்கு வீடில்லையெனில் வீடு வழங்க தயார்- ஜனாதிபதி

  • Jan 27, 2025 - 10:58 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச வசிப்பதற்கு வீடு இல்லை என்றால் அவருக்கு வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் யார் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் அமைந்துள்ள அவரது சொந்த ஊரானதம்புத்தேகமவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் மாளிகைகளில் வசிப்பது நியாயமான விடயம் இல்லை, நாங்கள் எவரையும் பழிவாங்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாங்கள் நாட்டை புதியதிசையில் இட்டுச்செல்கின்றோம், வெளியேறுங்கள் என நாங்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்னர் அவர்கள் வெளியேறவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

  • Jan 27, 2025 - 07:12 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (27) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது தவணை மூன்று கட்டங்களாக நடைபெறுவதோடு, முதல் கட்டம் இன்று முதல் மார்ச் 14 வரை நடைபெறும். முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 முதல் 11 வரையிலும், மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 முதல் மே 9 வரையிலும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

புலிகளின் மீள செயற்படும் சாத்தியமிருப்பின நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு மஹிந்தவிடம் அரசாங்கம் வலியுறுத்தல்

  • Jan 26, 2025 - 06:08 AM
  • 0 Comments

மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த வழக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது மீண்டும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடி எழுச்சி பெறுவது தொடர்பான தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி வசம் இருக்குமாயின் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் […]

முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 2வது நாளாக தொடர்கின்றது

  • Jan 25, 2025 - 06:49 PM
  • 0 Comments

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் […]

முக்கிய செய்திகள்

மகிந்தவின் 2 வது புத்தாவுக்கு 27 ம் திகதி வரை விளக்கமறியல்

  • Jan 25, 2025 - 06:27 PM
  • 0 Comments

யோசித ராஜபக்ஸவை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீதவான் உத்தரவிட்டார். பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஸ இன்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார். ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோசித […]

முக்கிய செய்திகள்

இளங்கலைஞர் மன்ற கட்டிடம் புனரமைக்கப்பட்டு மீள திறந்துவைக்கப்பட்டுள்ளது

  • Jan 25, 2025 - 05:27 PM
  • 0 Comments

வடக்கு மாகாண அவைத்தலைவரும் இளங்கலைஞர் மன்றத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துக்ககொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திறந்துவைத்தார். கௌரவ விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் மன்றக் காப்பாளருமான செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனும் ஈழத்தின் சிரேஸ்ட இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணனும் கலந்துகொண்டணர். இன்று சனிக்கிழமை (25) முதல் திங்கட்கிழமை (27) வரை காலை மாலை நிகழ்வுகளாக நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு பொலிஸ் ஆணைக்குழு நேற்று வகுப்பெடுத்தது

  • Jan 23, 2025 - 09:00 AM
  • 0 Comments

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. பொலிஸாரின் சில இடமாற்றங்களைச் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கம் கொடுத்துள்ளது […]

முக்கிய செய்திகள்

சமஸ்டியே சரியான தீர்வென தமிழ்த்தேசிய அரசியல் கட்சியினர் கனடாவிடம் கூட்டாகத் தெரிவிப்பு

  • Jan 23, 2025 - 06:53 AM
  • 0 Comments

ஒற்றையாட்சி முறைமையே இனப்பிரச்சினையாக அடிப்படைக்காரணமாக விளங்குவதால் தம்மால் ஒருபோதும் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாதென கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனனிடம் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக தெரிவித்துள்ளனர் தமிழர் தரப்பு சமஸ்டித்தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான வலுவான அழுத்தங்களை கனடா பிரயோகிக்கவேண்டும் எனக் அவர்கள் கனடாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் சமஸ்டி முறைமை தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவசியமான நிதியளிப்பையும் கனடாவிடம் கேட்பதற்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மறந்துவிடவில்லை இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ […]

செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனை அநுர அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது- தீவக சிவில் சமூகம்

  • Jan 22, 2025 - 08:50 PM
  • 0 Comments

மேன்முறையீட்டு நீதிபதிக்கான பதவி உயர்விற்கு அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அதில் கவனம் செலுத்தாது நீதிபதி இளஞ்செழியனுக்கு அநுர அரசு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாடியுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது’ இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp