உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாதீட்டில் செல்வம் அடைக்கலநாதன் எம்பி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார் அர்சுனா எம்பி வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை

  • Feb 25, 2025 - 08:23 PM
  • 0 Comments

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவினால் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று பாராளுமன்றத்தில் எழாவது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கடந்த ஜனவரி ஒன்றிலிருந்து 17 துப்பாக்கிச் சூடு 49 பேர் கைது!

  • Feb 25, 2025 - 02:22 PM
  • 0 Comments

அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெற்ற அனைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடைய பெரும்பாலானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். காவல்துறை ஊடக பிரிவில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையில் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 11 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவை எனவும், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெண்ணை தேடியலையும் இலங்கை பொலிஸார், உதவினால் 10 இலட்சமாம். யாருதவுவர்?

  • Feb 25, 2025 - 01:09 PM
  • 0 Comments

புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ‘கணேமுல்ல சஞ்சீவ’ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐ.எம்.எப்பின் ஒழுங்குப்படுத்தலுக்கு அமையவே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – பேராசிரியர் வசந்த அதுகோரல

  • Feb 24, 2025 - 01:48 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சவால்மிக்கது. அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கத்தை நடைமுறையில் செயற்படுத்துவதும் சவால்மிக்கது. அரச மற்றும் தனியார்துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்காலத்தில் பணவீக்க அதிகரிப்புக்கு ஏதுவானதாக அமையும். வினைத்திறனான திட்டங்களை செயற்படுத்தி பயனடைந்தால் மாத்திரமே 2028 ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடன்களை செலுத்த முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்தார். அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் குறித்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பில் பொலிஸார் நடத்pய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

  • Feb 22, 2025 - 08:57 AM
  • 0 Comments

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 21-02-2025) மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிஸார் கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரிகள் இருவரையும் அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள் இருவரும் சுட முயன்ற போதே பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்

  • Feb 21, 2025 - 05:02 PM
  • 0 Comments

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆகவே, எமது கோரிக்கையை புரிந்துகொண்டு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அத்து மீறும் இந்திய கடற்தொழிலாளர்களுக்கெதிராக எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் – தீவக கடற்தொழில் அமைப்பு

  • Feb 21, 2025 - 04:55 PM
  • 0 Comments

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேச கடற்தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அர்ச்சுனா எம்பி நல்லவரா கெட்டவரா? விசயமா?விசரா என ஆராய்நத குழு அறிக்கையை வெளியிட்டது

  • Feb 21, 2025 - 12:46 PM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை மற்றும் நடவடிக்கைகள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் பிரதித் தவிசாளரான ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் விஜித ஹேரத் மற்றும் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். அத்துடன், இந்த அறிக்கையானது, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் என […]

முக்கிய செய்திகள்

கொழும்பில் நீதிமன்ற துப்பாக்கிதாரியென சந்தேகத்தில் ஒருவர் கைது

  • Feb 19, 2025 - 09:21 PM
  • 0 Comments

இன்று கொழும்பு கணேமுல்ல சந்தீவா கொலையாளியான முக்கிய சந்தேகநபர் புத்தளத்தில் கைது செய்யப்ட்டுள்ளார். புத்தளம் பலாவியா பகுதியில்கொழும்பில் நீதிமன்ற துப்பாக்கிதாரியென சந்தேகத்pல் ஒருவர் கைது இன்று கொழும்பு கணேமுல்ல சந்தீவா கொலையாளியான முக்கிய சந்தேகநபர் புத்தளத்தில் கைது செய்யப்ட்டுள்ளார். புத்தளம் பலாவியா பகுதியில் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிஃப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கணேமுல்ல சந்தீவா இன்று காலை கொழும்பு; நீதிமன்றத்தில் துப்பாக்கிச் […]

முக்கிய செய்திகள்

வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட திட்டங்கள் அவசியமென்கிறார் சத்தியலிங்கம் எம்பி

  • Feb 19, 2025 - 08:58 PM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் நீண்ட கால யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மூன்று மக்கள் குழுக்கள் உள்ளன. பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் எமது சமூகத்தில் மூன்றில் ஒரு பகுதியினராக உள்ளனர். இவர்களை முன்னேற்ற வேண்டும். எமது மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கே விசேட திட்டங்களை கொண்டு வர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp