உலகம்

கனடாவின் பீல் பிராந்தியத்தில் கப்பம் கோரிய தமிழர் உட்பட 21 பேர் கைது

  • Dec 12, 2024 - 07:23 PM
  • 0 Comments

பிரம்டன் மற்றும் மிசிசாக பகுதியில் தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நபர்களை இலக்கு வைத்து இந்த கப்பம் கோரல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மொத்தமாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 154 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கப்பம் கோரல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் தொடர்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. முகநூல் மற்றும் றாயவளயிp ஊடாக இந்த கப்பம் கோரல்கள் […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…..! (காணொளி)

  • Dec 10, 2024 - 01:24 AM
  • 0 Comments

ஆவா குழுவின் தலைவர்; பிரசன்னா நாகலிங்கம் கனடாவில் கைது. நாடு கடத்த திட்டம் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் உதவி திருகோணமலை மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்       https://www.youtube.com/watch?v=EG8sCYezbyg

செய்திகள்

ஆவா குழுவின் தலைவர்; பிரசன்னா நாகலிங்கம் கனடாவில் கைது. நாடு கடத்த திட்டம்

  • Dec 9, 2024 - 09:40 PM
  • 0 Comments

இலங்கையிலிருந்து பிரான்சிற்கு தப்பியோடிய சந்தேக நபரான பிரசன்னா நாகலிங்கம் , இந்த வருடம் கனடாவில் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் 2022 செப்டம்பரில் அபிராமன் பாலகிருஸ்ணன் என்பவரை கொலை செய்தமை தொடர்பிலும் மற்றைய ஒருவரை காயப்படுத்தியமை தொடர்பிலும் பிரசன்னாவை நாடு கடத்துமாறு பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் நீதிதிணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது. சந்தேகநபர் அஜந்தன் சுப்பிரமணியம் எனவும் அழைக்கப்படும் பிரசன்னா நாகலிங்கம் இலங்கையின் ஆவா குழுவின் தலைவர் என கருதப்படுகின்றார் என தெரியவருகின்றது லங்கையின் யாழ்ப்பாணத்தில் இயங்கிய சமூக […]

செய்திகள்

அமெரிக்க பிரதிநிதிகளும் ஜனாதிபதியும் சந்திப்பு

  • Dec 7, 2024 - 05:36 PM
  • 0 Comments

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்க பிரதிநிதிகள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இச்சந்திப்பில் இலங்கையின் நிர்வாகம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கான அமெரிக்க ஆதரவை அமெரிக்க பிரதிநிதிகள் மீண்டும் […]

செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை திருத்தப்பட்டுள்ளது- அரசாங்கம்

  • Dec 5, 2024 - 02:33 PM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். ‘அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம். அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்தத் திருத்தங்களின் விடயங்களை […]

செய்திகள்

விடுதலைப் புலிகளின் கொடியையோ இலச்சினையையோ காட்சிப்படுத்த முடியாது- அநுர அரசு

  • Dec 4, 2024 - 11:52 AM
  • 0 Comments

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் குழுவொன்று முயல்கிறது என பொதுமக்;கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவ்வாறனவர்கள் சமூக ஊடகங்களில் போலியான பதிவுடுவதாகவும் அவர் சிலவருடங்களிற்கு முன்னர் முல்லைத்தீவில் இடம்பெற்ற மாவீரர் தினநிகழ்வுகள் குறித்த காணொளிகளை இந்த வருடம் பதிவிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். வடக்கில் 244 மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆனால் பத்தில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் கொடிகள் இலச்சினைகள் காட்சிப்படுத்தப்பட்டன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் குடும்பத்தவர்கள் தங்கள் உறவுகளை […]

உள்ளூர் செய்திகள்

சுதுமலையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த பூசகர் பரிதாபமாக உயரிழப்பு!

  • Dec 3, 2024 - 12:00 AM
  • 0 Comments

வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றிற்குள் விழுந்த பூசகர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன் போது சுதுமலை தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் என்ற பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த பூசகர் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துக்கொண்டு இருந்தவேளை கால்தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் கிணற்றினுள் மிதப்பதை அவதானித்த உறவினர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் […]

உள்ளூர் செய்திகள்

சிறீதரன் எம்.பி. கிளிநொச்சி அரச அதிபருடன் சந்திப்பு…!

  • Dec 2, 2024 - 07:25 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று(01.12.2024) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் குறிப்பாக, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடருதவிகளை வழங்குதல், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டியுள்ள […]

செய்திகள்

சீரற்ற காலநிலையால் 132,110 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

  • Nov 29, 2024 - 11:46 AM
  • 0 Comments

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் நாடு முழுவதும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (28) காலை 06.00 மணியளவில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, இதுவரை 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஒருவர் காணாமல் போயுள்ள அதே வேளை 20 பேர் காயமடைந்துள்ளனர். அனர்த்தம் காரணமாக 102 வீடுகள் முழுமையாகவும், 2,096 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 45,329 குடும்பங்களைச் சேர்ந்த 115,319 பேர் தற்போது உறவினர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளனர் 12,348 […]

செய்திகள்

சண்டித்தனம் விடும் நாமல். அநுர அரசு மௌனம்?

  • Nov 25, 2024 - 07:23 AM
  • 0 Comments

அரசியல் களத்தில் சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக நாமல் இராஜபக்ஸ தெரிவித்துள்ளார் இராஜபக்ஸ குடும்பத்தினர் மீது தேசிய மக்கள் சக்தி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியே ஆட்சியை பிடித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளாhர் மஹரக பகுதியில் நேற்று (24) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர்; இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp