செய்திகள்

மருதானை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபரான பெண்ணொருவர் தற்கொலை!

  • Jan 22, 2025 - 08:56 PM
  • 0 Comments

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் இந்தச் சம்பவம் இன்று (22) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

பாராளுமன்ற விவாதம் எதற்காக என் புரிந்துகொள்ளாதவர்களே இப்போது எதிர்க்கட்சியாக இருக்கின்றார்கள்- பிரதமர் ஹரினி

  • Jan 22, 2025 - 05:28 AM
  • 0 Comments

மக்களை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் முன்னர் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை விளங்கிக்கொள்ள முடியாதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். Clean Sri Lanka  வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் இரண்டு நாள் விவாதத்தின் முதல் நாளில் (21) கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் பாராளுமன்றம் கூடிய நாளிலிருந்து இந்த எதிர்க்கட்சியின் பொறுப்புக்கள் என்ன என்றும், இந்த எதிர்க்கட்சி எந்த […]

முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் அரசியல் சூனியத்தால் நாடு உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது- புபுது ஜாகொட

  • Jan 21, 2025 - 08:50 AM
  • 0 Comments

அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடகிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவந்துள்ளார் தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த இணக்கப்பாடுகள் மூலம் இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளா . ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள […]

முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐ.தே.க. பேச்சுவர்த்தையில் ஈடுபடவுள்ளது

  • Jan 21, 2025 - 05:34 AM
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க கட்சியின் செயற்குழு பூரண அனுமதியை வழங்கியுள்ளது. கலந்துரையாடல்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (20) இடம்பெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன

  • Jan 20, 2025 - 03:06 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டூர் – வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் […]

செய்திகள்

கொழும்பு மொரட்டுவவில் பொலிஸார் மீது தாக்குதல் பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

  • Jan 20, 2025 - 06:02 AM
  • 0 Comments

100க்கும் மேற்பட்டோர் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால்கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அங்கு ஒரு பதற்றமான சூழல் காணப்படுகின்றது. மொரட்டுவ பகுதியில் உள்ள சிலரை கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப் பிரதேச மக்கள் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் மின்பந்தல் கட்டப்பட்டு வருவதாவும், இதனால் அங்கிருந்த ஒரு குழு வீதியை மறித்து செயற்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவர்களை […]

உலகம் வினோத உலகம்

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எது தெரியுமா? தெரியாவிட்டால் வாசியுங்கள்

  • Jan 19, 2025 - 10:21 PM
  • 0 Comments

எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.. 1.சிங்கப்பூர் – 195 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 2. ஜப்பான் – 193 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 3. பின்லாந்து,பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின்- 192 நாடுகளுக்கு விசா தேவையில்லை . 4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவீடன், நார்வே- 191 நாடுகளுக்கு விசா தேவையில்லை. […]

முக்கிய செய்திகள்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தினை அடைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்- யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

  • Jan 19, 2025 - 04:09 PM
  • 0 Comments

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு என்பவற்றினால் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் எதிர்க்க வேண்டும. அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள், ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்துப் பணியாற்ற வேண்டும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார் பொங்கு தமிழ் மக்கள் எழுச்சிப் பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு நாள் நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்!

  • Jan 15, 2025 - 01:50 PM
  • 0 Comments

இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாசாரத்தை அனுபவிக்க அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று தாம் நம்புவதாக பிரதி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துணை அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தாம், கிட்டத்தட்ட சீனா முழுவதும் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பன்முகத்தன்மை கொண்ட கலாசாரம், உணவு மற்றும் நட்பு என்பவற்றைக் கொண்ட அந்த நாட்டு மக்களால் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில், சீனாவில் படிக்க வேண்டும் என்ற தனது கனவின்கீழ், […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்…!

  • Jan 15, 2025 - 01:38 PM
  • 0 Comments

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp