மஹிந்தவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவும் சந்தித்தனர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்துகொண்டார்.









