உள்ளூர்

வவுனியாவில் விபத்து ஒருவர் பலி ஒருவர் காயம்

  • Dec 26, 2024 - 02:09 PM
  • 0 Comments

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கோவில்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் யாழ். அராலி பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா

  • Dec 25, 2024 - 01:44 AM
  • 0 Comments

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும், மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலூக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இணங்கிய பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதும், கடன் மதிப்பீட்டை உயர்த்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கி இதனைக் குறிப்பிட்டிருந்தார். Fitch Ratings இலங்கையின் கடன் மதிப்பீட்டை […]

செய்திகள்

சித்திரை புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது- உதய கம்மன்பில

  • Dec 23, 2024 - 09:33 PM
  • 0 Comments

மார்ச் – ஏப்ரல் வரையான காலப்பகுதியில் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதால் மே மாதமளவில் தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி […]

செய்திகள்

பாடசாலைகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது என்கிறார் பிரதமர்

  • Dec 21, 2024 - 09:16 PM
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களான, ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு ; தெரிவித்தார். அத்துடன் கன்னங்கராவின் கல்விச் […]

செய்திகள்

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர்களை வெளியிடுமாறு ரிஸாட் பதியுதீன்; கோரிக்கை

  • Dec 19, 2024 - 12:33 PM
  • 0 Comments

கொவிட் தொற்றில் மரணித்த ஜனாஸாக்களை எரித்தமை தொடர்பில் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில் எங்களுக்கு திருத்தியானதாக இல்லை. ஜனாஸாக்களை எரித்தவர்கள் தொடர்பில் கோட்டாய ராஜபக்ஸ அதன் பின் ரணில் விக்ரமசிங்க என எவரும் வெளியிடவில்லை ஜனாஸா எரிப்பு தொடர்பான கேள்விக்கான பதிலும் சுகாதார அமைச்சில் இருக்கும் அதிகாரிகள்தான் எழுதிக்கொடுத்திருப்பார்கள். ஆகவே எரித்தவர்களின் பெயர் விபரங்களை தயவுசெய்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்வதாக ரிஸாட் மேலும் தெரிவித்துள்ளாh

செய்திகள்

ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகின்றது

  • Dec 19, 2024 - 12:18 PM
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது. சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரிகளை குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமளவில் நிவாரணம் வழங்குவதாக குறிப்பிடுகிறார். நாடு அரிசியின் விலை 230 ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் சந்தையில் 250 ரூபாவுக்கே அரிசி விற்பனை […]

செய்திகள்

அர்ச்சுனா எம்பி யின் பதவி பறிபோகுமா? புதிய திருப்பம்

  • Dec 17, 2024 - 04:36 PM
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசாங்க வைத்திய அதிகாரி பதவியில் இருந்து இராஜினாமா செய்யாமல் கையளித்துள்ளதாக புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் மனு தாக்கல் செய்துள்ளார். அரச சேவையில் தனிநபர் ஒருவர் வகிக்கும் பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என்றும், அவர் எம்.பி.யாக நியமிக்கப்பட்டதை […]

செய்திகள்

காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு ;

  • Dec 15, 2024 - 10:59 PM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினா இங்கு உரையாற்றிய சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ் மாவட்டத்தில் இராணுவ பிடியில் காணி விடுவிப்பதற்கு கால எல்லையை நிர்ணயிக்க முடியுமா? ஒரு கால எல்லையை நிர்ணயித்து செயல்படும்போதுதான் அதற்கான வேலைத்திட்டங்களை செயல்படுத்த முடியும். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் காணி விடுவிப்பு வெகு விரைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் […]

உள்ளூர் செய்திகள்

தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

  • Dec 15, 2024 - 03:29 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் […]

உள்ளூர் செய்திகள்

புதிய சபாநாயகர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை!

  • Dec 15, 2024 - 03:21 AM
  • 0 Comments

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நாட்டில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 13 ஆம் திகதி பிற்பகல் அசோக ரன்வல, சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp