உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வரலாற்றுச் சாதனை படைத்த மாணவன் பர்தானுக்கு வாழ்த்துகள்..!

  • Apr 1, 2026 - 10:32 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில், வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று எமது சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் எம்.எஸ்.எம். பர்தான் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய உயரிய சாதனையானது, அவரது உறுதியான இலக்கு, அயராத உழைப்பு மற்றும் தளராத தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்தச் சாதனை அவரது குடும்பத்திற்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த காத்தான்குடி மண்ணுக்கும் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கரைக்கு கொண்டு வரப்பட்ட ஆழ்கடலில் பிடிபட்ட படகு..!

  • Apr 1, 2026 - 09:46 AM
  • 0 Comments

போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேற்கு திசையில் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த படகில் இருந்த 6 சந்தேகநபர்களுடன் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 128வது சிரார்த்த தின நிகழ்வு..!

  • Mar 31, 2026 - 12:06 PM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 128வது சிரார்த்த தின நிகழ்வு இன்று 31.03.2026 மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் தலைவரும் மாநகர […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொத்து மற்றும் ரைஸ் விலைகள் உயர்வு..!

  • Mar 31, 2026 - 11:06 AM
  • 0 Comments

இன்று (31.03.2026) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் அந்தச் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை சட்டத்தை நிறைவேற்றிய இஸ்ரேல்..!

  • Mar 31, 2026 - 10:58 AM
  • 0 Comments

உயிரைப் பறிக்கும் வகையிலான கொடூரமான தாக்குதல்களை நடத்தும் பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30.03.2026) நிறைவேற்றியுள்ளது. இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்றைய தினம் GMOA நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்..!

  • Mar 31, 2026 - 09:29 AM
  • 0 Comments

வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. இன்று (31.03.2026) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார். இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவுகள், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முன்வர வேண்டும்..!

  • Mar 30, 2026 - 10:19 AM
  • 0 Comments

தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை 5 மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பங்களிப்பு இந்த நேரத்தில் அவசியமானது என்றும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருட்களை எரிப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்ட விலை நிர்ணயக்குழு கூட்டம்..!

  • Mar 27, 2026 - 09:52 AM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இவ்வாண்டிற்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம் நேற்று (26) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தொழிலாளர் ஊதியம், கட்டுமானப் பொருட்களின் விலைகள் போக்குவரத்து, மற்றும் இயந்திர வாடகை, மாமிச உணவுப் பொருட்களின் உச்ச வரம்பு விலை தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் மேற்கண்ட பிரிவுகளுக்கான தற்போதைய விலை நிலவரங்கள், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு..!

  • Mar 25, 2026 - 11:54 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் புதன்கிழமை(25.03.2026) பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ், சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர். காணொளி இணணப்பு: https://www.facebook.com/share/v/17Ma9fs2j5/

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் கோரிக்கை..!

  • Mar 25, 2026 - 11:08 AM
  • 0 Comments

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் குமார ஜயகொடி இதனைத் தெரிவித்தார். முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp