உள்ளூர் செய்திகள்

மகிந்தவுக்கு தமது சொந்த வீடுகளை அறுதியுறுதியோடு வழங்க காத்திருக்கும் சிங்கள மக்கள்

  • Aug 4, 2025 - 12:09 PM
  • 0 Comments

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் வகையில் சட்டமூலம் ஒன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியான […]

உள்ளூர் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலத்தினை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது- அமைச்சர் சந்தன அபேரத்ன

  • Jul 31, 2025 - 12:05 PM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் தொடர்பான யோசனையை அரசாங்கத்தின் சார்பில் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்னவும் தெரிவித்துள்ளார். இதே சட்டமூலத்துடன் தொடர்புடைய தனிநபர் பிரேரணை, அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா. சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்திருந்த பிரேரணைகளுடன் இது ஒத்துள்ளது. எனவே இதை மீண்டும் ஆராய தேவையில்லை என்றும், உடனடியாக நிறைவேற்ற […]

உள்ளூர் செய்திகள்

காதலியை கழுத்தறுத்து கொன்று விட்டு காதலன் தற்கொலை

  • Jul 23, 2025 - 05:32 PM
  • 0 Comments

இளம் பெண்ணை கொன்று அவரது பெற்றோரை வெட்டி காயப்படுத்திய இளைஞன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரங்கல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அவரது காதலன் என கூறப்படும் இளைஞனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் தனது காதலி எனப்படும் இளம் பெண்ணொருவரின் வீட்டிற்கு பிரவேசித்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசர் உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவு

  • Jul 22, 2025 - 05:55 PM
  • 0 Comments

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. தற்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜூலை 27ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். அவர் ஜூலை 25ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் பிரியாவிடை உரை ஆற்றவுள்ளார். நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினராக செயல்பட்டதுடன், பல […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டடத்தை உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் பார்வையிட்டனர்

  • Jul 22, 2025 - 01:09 PM
  • 0 Comments

மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் கட்டடம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இப்பார்வை இடம்பெற்றது. இதற்கு முன்னதாக, மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாணக் கோட்டை ஆகியவற்றை புனரமைப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு அவசியம் என மாவட்ட செயலர், உலக வங்கி குழுவினரிடம் வலியுறுத்தியிருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க, உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு இணங்க கடந்த இரண்டு மாதங்களாகவே உலக வங்கி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து முற்றிலுமாக தீக்கிரை ஒருவர் காயம்

  • Jul 19, 2025 - 03:17 PM
  • 0 Comments

இந்த சம்பவம் முசைலயவ ஆயடயமா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18-07) காலை இடம்பெற்றது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். விபத்து நேரத்தின் போது பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ளனர். தீ பரவிய வேளையில், பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், பயணிகள் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. விபத்துடன் தொடர்புடைய நிறுவனம் செயற்பாடுகளை […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் பாடசாலை மாணவிகள் கர்ப்பம் தரிப்பது அதிகமாகின்றது- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

  • Jul 19, 2025 - 03:01 PM
  • 0 Comments

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் நிலைமை அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (18-07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் மற்றும் அவர்கள் தாய்மாராகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து இளம்பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வை வழங்கும் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுத் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது- மத்திய வங்கி

  • Jul 14, 2025 - 07:45 AM
  • 0 Comments

2025 மே மாதத்தில் இலங்கையின் மொத்த இறக்குமதி செலவுத் தொகை 1.507 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 179 மில்லியன் டொலர் குறைவாகும். இந்த வீழ்ச்சியானது தனிநபர் வாகன இறக்குமதியில் பெரிதாகக் காணப்படாமல் இருந்த போதிலும், சேவைத் துறையிலுள்ள வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சில வர்த்தகப் பொருட்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக உருவாகியுள்ளது. தனிநபர் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மதிப்பு மே மாதத்தில் […]

செய்திகள் முக்கிய செய்திகள் விளையாட்டு

இத்தாலி, 2026 டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றது

  • Jul 14, 2025 - 07:30 AM
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்த உள்ள 2026 டி20 உலகக் கிண்ண தொடருக்காக, இத்தாலி அணியின் தகுதி பெற்ற சாதனை ஒரு வரலாற்றுப் பதிவு ஆகியுள்ளது. இதுவே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐஊஊ) போட்டிக்காக இத்தாலி தகுதி பெற்றது முதல் முறையாகும். இத்தாலி அணி, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) ஹேக்கில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்திடம் 9 விக்கெட்டுகளால் தோல்வியடைந்த போதிலும், தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருந்து 2026 உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி […]

உள்ளூர் செய்திகள்

அர்சுனா எம்பியின் வாயாலேயே எதிர் கட்சி எம்பிக்களை CID யினர் விசாரித்தனர்- தயாசிறி ஜயசேகர

  • Jul 14, 2025 - 07:12 AM
  • 0 Comments

323 கன்டெய்னர்கள் சுங்கச் சோதனை இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தியதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரிமைச் சிக்கல்களை எழுப்பியதற்கும், சபாநாயகரின் பதில் இதுவரையும் கிடைக்கவில்லையென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார் இந்த விவகாரம் கடந்த வாரம் ஒரு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளா அதனைத் தொடர்ந்து, சில எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊஐனுயால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படினர். இதற்கு எதிர்வினையாக, அவர்களது அழைப்புகள் முற்றிலும் காரணமற்றவை என எதிர்க்கட்சியினர் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp