வடிவேல் பாணியில் கிணறு காணாமல் போனது போல நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!
நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் நேற்று (03) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் போது படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவின் மற்றொரு பகுதியில் தரித்து நிறுத்துவதற்காக இந்த படகு கொண்டு செல்லப்பட்டது. இதன்போதே நங்கூரம் கடலில் காணாமல்போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெடுந்தாரகைப் படகானது குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு வரையான பயணிகள் போக்குவரத்து சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









