முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்குமாறு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் தமிழ் தேசியம் சார் எண்ணம் கொண்டவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள் மாவீரர்கள் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். […]









