ஈழம் செய்திகள் புதியவை

இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல..!

  • Mar 26, 2026 - 11:12 AM
  • 0 Comments

இலங்கைத் தீவானது இன்று சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான “சிங்கள தேசம்” என்று முன்னிறுத்தப்பட்டாலும், வரலாற்றின் ஆழமான பக்கங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன. ஆனால், வரலாற்றைத் திரித்து, பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு ஆதிக் குடியாக வாழ்ந்து வரும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நடக்கும் திட்டமிட்ட முயற்சிகளை நாம் சான்றுகளுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உலகில் மூத்த மொழியாகவும், செம்மொழியாகவும் திகழும் தமிழைப் போன்று சிங்களம் ஒரு தூய மொழி அல்ல. மொழியியல் ரீதியாகப் பார்க்கும்போது, சிங்களம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

  • Mar 26, 2026 - 10:57 AM
  • 0 Comments

இலங்கையின் பல பாகங்களில் இன்று (26.03.2026) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த அதீத வெப்பம் உணரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தின் ஈரப்பதம் மற்றும் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு இது கணக்கிடப்படுகிறது. சாதாரண வெப்பநிலையை விடவும் நமது உடல் உண்மையாக உணரக்கூடிய வெப்பத்தையே இது குறிக்கின்றது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை..!

  • Mar 26, 2026 - 10:19 AM
  • 0 Comments

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தெஹ்ரானுக்கு எண்ணம் இல்லை என்றும், ஈரான் தொடர்ந்து போரிடும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மீண்டும் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு, எதிர்ப்பைத் தொடர்வதே எங்கள் கொள்கை என அராக்சி அரசு தொலைக்காட்சியில் கூறினார். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மேலும் எங்கள் நிலைப்பாடு முற்றிலும் கொள்கை ரீதியானது என்று நான் நம்புகிறேன். இப்போது பேச்சுவார்த்தை பற்றிப் பேசுவது தோல்வியை ஒப்புக்கொள்வதாகும் என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்க […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 26, 2026 - 09:22 AM
  • 0 Comments

26.03.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செம்முகம் ஆற்றுகைக் குழுவின் நாடக விழா..!

  • Mar 25, 2026 - 11:25 AM
  • 0 Comments

அனைவரும் வாரீர் உலக நாடக தினத்தை முன்னிட்டு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ஏற்பாட்டில் 26.03.2026 வியாழக்கிழமை மற்றும் 27.03.2026 வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவை அரங்கத்தில் நாடக அரங்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அந்தவகையில் வியாழக்கிழமை பிற்பகல் 4மணிக்கு சிறுவர்களுக்கான அரங்க வெளி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து 5மணிக்கு செம்முகம் ஆற்றுகைக் குழுவின் எங்கே எங்கே குடை எங்கே?, பூமணி ஆகிய நாடக ஆற்றுகை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. 27.03.2026 வெள்ளிக்கிழமை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் நம்பிக்கையுடன் ஈடுபடுங்கள்..! ஈரானை வலியுறுத்திய மக்ரோன்

  • Mar 25, 2026 - 11:15 AM
  • 0 Comments

நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுமாறு ஈரானை வலியுறுத்தினார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன். ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசியபோதே மக்ரோன் இதனைத் தெரிவித்தார். பதற்றத்தைத் தணிப்பதற்கு வழிவகுக்கவும், ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியத்தை சீர்குலைக்கும் அதன் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கட்டமைப்பை வழங்கவும், ஈரான் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று நான் அழைப்பு […]

புதியவை உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 25, 2026 - 10:45 AM
  • 0 Comments

25.03.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மாள் ஆலய மகா சங்காபிஷேகம்..!

  • Mar 25, 2026 - 10:12 AM
  • 0 Comments

தேசத்து ஆலயமாக விளங்கும் வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மாள் ஆலய மகா சங்காபிஷேகம் நேற்றையதினம்(24.03.2026) இடம்பெற்றது. மேற்படி சங்காபிஷேகமானது ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்களின் வழிகாட்டலில் 108 சங்குகளுடன் சங்காபிஷேக கிரிகைகள் ஆலய குரு சிவஸ்ரீ கோபர்த்தனக்குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ சபாரெத்தினக் குருக்கள், சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் ஒத்துழைப்புடன் சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது. ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்களிற்கு மீனாட்சி அம்மாளின் திருவுருவப்படங்கள் வழங்கப்பட்டன. காரைதீவு இசைக்கலைஞர் விபுலமணி இ.கோபாலசிங்கத்தின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

விவசாயிகளின் சவால்கள் குறித்து தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வு..!

  • Mar 25, 2026 - 09:51 AM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த தற்போதைய நிலைமைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.ஶ்ரீநேசன் ஆகியோர் நேற்றைய தினம் (24.03.2026) மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். ​இந்த சந்திப்பின் போது ​சிறு குளங்கள் அபிவிருத்தி, மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சிறு குளங்கள் மீளப்புனரமைப்பு, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆளணிப் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் இடம்பெற்ற உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்..!

  • Mar 24, 2026 - 12:33 PM
  • 0 Comments

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று (24.03.2026) சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றன. கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வின் ஆரம்பமாக, காசநோய் ஒழிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சுகாதாரத் துறையினரின் விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கல்முனை பிராந்திய […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp