செய்திகள்

பிரபாகரனை போடுறதுக்கு வாங்கின கடனை எப்படி கட்டப்போறியல் சொல்லுங்கோ- பாட்டலி சம்பிக்க ரணவக்க

  • Nov 25, 2024 - 07:36 AM
  • 0 Comments

தேசிய மற்றும் சர்வதேச கடன்கள் அரசாங்கத்துக்கு பாரிய சவால். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் அரசின் நிதி நிலைமை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு […]

உள்ளூர்

மன்னார் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

  • Nov 25, 2024 - 07:04 AM
  • 0 Comments

வெள்ள நீரை வெளியேற்ற கோரிதலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்; நடத்தியுள்ளனர் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி நேற்று (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாவிலுப்பட்டான் கிராமத்தில் 108 குடும்பங்கள் வசித்து வருகின்றாhர்கள் பாவிலுப்பட்டான கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை […]

உள்ளூர் செய்திகள்

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

  • Nov 23, 2024 - 12:59 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் […]

செய்திகள்

இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பிரசன்ன, ரொஷான், ரமேஷ் ஆஜர்

  • Nov 21, 2024 - 11:28 AM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகியுள்ளனர் தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே இவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாளை (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் […]

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

  • Nov 20, 2024 - 11:00 AM
  • 0 Comments

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த 11ஆம் திகதி பதுளையில் பொலிஸாருடன் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை பதுளை பொலிஸ் நிலையம் சென்ற போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர் அண்மையில் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதுளை நகரில் ’10’ஆம் இலக்கம் கொண்ட சட்டைகளை அணிந்து கொண்டு நடமாடியதால் பொலிஸாருடன் முறுகல்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

உள்ளூர்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸார் உடந்தை

  • Nov 16, 2024 - 08:20 AM
  • 0 Comments

கிளிநொச்சியின் பல பிரதேசங்களில்; சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுகின்றது என கிளிநொச்சி வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் விவசாயம் செய்யும் மக்களுக்கு சொந்தமான காணிகளிலும் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் கிளிநொச்சி பொலீஸாருடன் நல்ல உறவில் இருப்பதனால் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொது மக்கள் குற்றம் […]

செய்திகள்

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

  • Nov 7, 2024 - 05:17 PM
  • 0 Comments

நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்தியாவில் இருந்து மட்டும் 7785 சுற்றுலாப் பயணிகளும்,ரஷ்யாவிலிருந்து 4,488 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,752 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,821 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,227 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,076 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை […]

செய்திகள்

லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கம்பி எண்ணுகிறார்.

  • Nov 4, 2024 - 01:15 PM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்த அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவுடுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது கைது […]

செய்திகள்

கடனும் வாங்கவில்லை காசும் அடிக்கவில்லை- விஜித ஹேரத்

  • Oct 29, 2024 - 01:37 PM
  • 0 Comments

    சமூக ஊடகங்களில் அரசு கடன் பெற்றதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன் புதிய நாணயத்தாள்களையும் அச்சிடவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேஇதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டம்.

  • Oct 28, 2024 - 01:40 AM
  • 0 Comments

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp