செய்திகள்

நாடு சரியான திசை வழியில் செல்ல அனைவரும் உதவ வேண்டும்- தோழர் சுகு

  • Dec 14, 2024 - 08:48 AM
  • 0 Comments

ஒரு நம்பிக்கை கீற்று இலங்கையில் தற்போது உருவாகியுள்ள சமூக அரசியல் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் சமூக மட்டத்தில் ஜனநாயக இடைவெளி ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது . மறைந்த தமது பிள்ளைகளை நினைவு கூரும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த வீதிகள் நிலங்களை மக்களிடம் ஒப்படைக்கும் காரியங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன . இன மத வாதத்துடன்எவ்வித சமரசமும் இல்லை என ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தோழர்களால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது . நாட்டின் நிர்வாக […]

உள்ளூர் செய்திகள்

யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் குறித்து தகவல் வெளியிட்ட யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

  • Dec 12, 2024 - 03:31 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண […]

செய்திகள்

வவுனியாவின் பல இடங்களை பொலிஸார் சுற்றிவளைத்து பலர் மீது வழக்குப் பதிவு

  • Dec 8, 2024 - 07:36 PM
  • 0 Comments

வவுனியா நகரம் மற்றும் நகரை அண்மித்த சில பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது. பருவ மழை மற்றும் சீரற்ற காலநிலையால் பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் வவுனியாவில் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பவற்றில் வவுனியா பொலிஸார் இன்று (08) திடீர் […]

செய்திகள்

அநுர அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை – காணாமலாக்கப்பட்ட உறவினர்கள்

  • Dec 8, 2024 - 07:19 PM
  • 0 Comments

இறுதி யுத்தத்தின் போது ஆனந்தபுரம், வட்டுவாகல், தேவிபுரம், ஓமந்தை ஆகிய நான்கு இடங்களில் எமது உறவுகள் சரணடைந்தபோது கடமையில் இருந்த படை அதிகாரிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முதற்கட்டமாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் சுவிட்சர்லாந்தின் இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லினிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் திணைக்களத்தின் சமாதானம், மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் இரண்டு நாட்கள் வடக்கிற்கான […]

உள்ளூர்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 3 ஆயிரம் வாக்குகளால் தப்பி பிழைத்த ரெலோவின் கலந்துரையாடல்!

  • Dec 7, 2024 - 02:00 PM
  • 0 Comments

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் கலந்துக்கொள்வதாக தெரியவருகின்றது அத்துடன் ரணில் ஆதரவு அணி வினோநோகராதலிங்கமும் கலந்துக்கொண்டுள்ளாராம் டெலோவின் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத ;தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில்இடம்பெற்றுவருகின்றது. ரெலோ தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும், சமகாலஅரசியல் நிலவரங்கள், தொடர்பாக பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது கலந்துரையாடலில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், மற்றும் விந்தன்கனகரத்தினம்,பிரசன்னா இந்திரகுமார்,செ.மயூரன் , பேச்சாளர் சுரேன் […]

செய்திகள்

ஒரு துப்பாக்கி மாத்திரமே பாதுகாப்பிற்காக வழங்கப்படும் – பாதுகாப்பு அமைச்சு

  • Dec 4, 2024 - 01:13 PM
  • 0 Comments

நபர் ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவில் பாதுகாப்பு […]

செய்திகள்

கடற்றொழில் அமைச்சரும்; இந்திய உயர்ஸ்தானிகரும் சந்திப்பு

  • Dec 1, 2024 - 10:49 AM
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் இலங்கை, இந்திய மீனவர்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை அமையவுள்ளதாக கடற்தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் […]

செய்திகள்

ஜனாதிபதி அநுர சிறப்பாக செயற்படுகின்றார்- ரணில்

  • Dec 1, 2024 - 06:29 AM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அநுர அரசாங்கம் தொடர்ந்தும் இணக்கம் தெரிவித்து சேர்ந்து செயற்படுவதற்கு ஜனாதிபதியை பாராட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்க சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது முன்னாள் ஜனாதிபதி ரணில் […]

உள்ளூர்

தற்காலிக இடைத்தங்கல் நிலையங்களுக்கு அரச அதிபரின் கள விஜயம்

  • Dec 1, 2024 - 06:18 AM
  • 0 Comments

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் நேற்று (30) கேட்டறிந்துக்கொண்டார் யாழ்ப்பாணத்தின் கல்லுண்டாய் பிரதேச வெள்ள நிலமைகளை ஆய்வு செய்து கல்லுண்டாய் தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் கட்டடத்தில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடினார் அதன் போது உடனடியாக தீர்க்க கூடிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் வழங்கினார். இதன் போது அனர்த்தத்திற்கு அப்பால் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சனைக்கு, […]

உள்ளூர்

வவுனியா இளம் தாய் யாழில் மரணம்

  • Nov 30, 2024 - 10:33 AM
  • 0 Comments

ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் வவுனியாவை சேர்ந்த குறித்த தாய் குருநகர் பகுதியில் உள்ள சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த போது சளி கூடியதால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே உயிர் பிரிந்ததாக அறிக்கையில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp