உள்ளூர்

வவுனியாவில் விபத்து ஒருவர் பலி ஒருவர் காயம்

  • Dec 26, 2024 - 02:09 PM
  • 0 Comments

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கோவில்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் யாழ். அராலி பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். […]

செய்திகள்

வவுனியா சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்

  • Dec 25, 2024 - 10:38 AM
  • 0 Comments

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. அந்தவகையில் வவுனியா சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேர் இன்று (25) விடுவிக்கப்பட்டனர்.

உள்ளூர் செய்திகள்

யாழ். தென்மராட்சியில் மண் அகழ்வு இடம்பெறும் இடங்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்

  • Dec 25, 2024 - 02:05 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதி மற்றும் விவசாய நிலங்களில் மண் அகழ்வு இடம்பெற்றுவரும் இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் பார்வையிட்டார். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை – கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதி மற்றும் விளை நிலங்களில் அண்மைக் காலமாக சட்டவிரோத மண் அகழ்வு இடம் பெற்றுவருகிறது. இதனைக் கண்டித்து பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்றுவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை […]

செய்திகள்

நத்தார் தினத்தையிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு அமுல்

  • Dec 23, 2024 - 12:02 PM
  • 0 Comments

பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதார் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனதுங்க தெரிவித்துள்ளார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பேச்சாளர், தேவைப்பட்டால் இராணுவத்தினரிடம் அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியை பொலிஸார் நாடுவார்கள் என மேலும் […]

உள்ளூர்

கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள்

  • Dec 22, 2024 - 08:23 AM
  • 0 Comments

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர் கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 37, 46 மற்றும் 53 வயதுடைய கெலன்பிந்துவௌ, பலாங்கொடை மற்றும் வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் […]

செய்திகள்

இன்று காலை யாழ் செம்மணி பகுதியில் இறந்த நிலையில் முதலை

  • Dec 21, 2024 - 09:43 PM
  • 0 Comments

யாழ் வளைவுக்கு மிக அன்மையில் அமைந்துள்ள செம்மணி வீதியில் இன்று காலை முதல் இறந்த நிலையில் முதலை காணப்படுகின்றது. குறித்த முதலை அருகில் உள்ள நீர் வெளியேறும் மதகிலிருந்து வீதிக்கு வந்த போது வீதியால் பயணித்த வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிந்திருக்காம் என கருதப்படுகின்றது.

உள்ளூர்

யாழ். போதனாவில் காவலாளியை கடித்து காயப்படுத்தியவர் கைது

  • Dec 20, 2024 - 10:41 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நடைப்பபெற்றுள்ளது மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது. 35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல அதிகரிப்பு

  • Dec 16, 2024 - 05:22 PM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் மொத்தமாக 39 பேர் விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். யாழ். போதனா வைத்தியசாலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக […]

செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே 

  • Dec 15, 2024 - 11:14 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அநுரகுமார திசாநாயக்க, தற்போது ஜனாதிபதியானதன் பின்னர் அதனை மறந்துவிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த தீர்மானத்தை மீளப்பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் கொழும்பு மாவட்ட உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வரப்பிரசாதங்களை […]

செய்திகள்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி போராட்டம்

  • Dec 14, 2024 - 07:52 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று முதல் இன்று சனிக்கிழமை மாலை வரை போராட்டம் இடம்பெற்று வருகிறது. தையிட்டியில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 மாத காலமாக தொடர்ந்த இப்போராட்டம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp