உள்ளூர் செய்திகள்

யாழ் நெடுந்தீவில் கத்திக்குத்து ஒருவர் பலி, நால்வர் படுகாயம்’

  • Aug 11, 2025 - 12:10 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய அற்புதராசா அகிலன் என்பவர் மீது பலமுறை கத்திக்குத்து நடத்தப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலாளியை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உட்பட நால்வருக்கும் கத்திக்குத்து காயம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களும் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் மேற்கொண்ட நபர் சம்பவத்திற்குப் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் முதலாவது பணக்காரனாக இஸாரா நாணயக்கார முதலிடத்தைப் பிடித்துள்ளார்

  • Aug 10, 2025 - 04:31 PM
  • 0 Comments

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் இஸாரா நாணயக்கார இலங்கையின் முதல்நிலை செல்வந்தராகத் திகழ்கிறார். இதன் மூலம், அவர் தம்மிக்க பெரேராவை முந்தி நாட்டின் பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலில், இந்திய தொழிலதிபர் முகேஸ் அம்பானி 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் மிகப்பெரிய செல்வந்தராக இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தானின் ஸாஹித் கான் 13.5 பில்லியன், […]

உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காணுமாறு கோரிக்கை

  • Aug 10, 2025 - 04:14 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர், சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடைபெற்று வரும் வழக்கு இலக்கம் யுசுஃ804ஃ23-இன் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த புதைகுழி 1994 முதல் 1996 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காணாமல் போனோர் அலுவலகம், 2016ஆம் ஆண்டின் […]

உள்ளூர் செய்திகள்

திருமலையில் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாள் போராட்டம் நடைப்பெற்றது

  • Aug 10, 2025 - 04:03 PM
  • 0 Comments

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஸ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தி, திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேசத்தின் திரியாய் கிராமத்தில் இன்று மக்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாளாகும். போர் பாதிப்புகளால் நீண்டகாலமாக சிக்கலில் உள்ள திரியாய் மக்கள், இன்றும் நில அபகரிப்பு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து, திரியாய் மக்களும், பல்வேறு இடங்களில் இருந்து வந்த […]

உள்ளூர் செய்திகள்

புத்தளம் மீன்வாடியில் 100 கோடி பெறுமதியான மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

  • Aug 8, 2025 - 10:29 AM
  • 0 Comments

கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்வாடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறு கோடிக்கு மேற்பட்ட பெறுமதி வாய்ந்த சட்டவிரோத மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமாக இருந்த மீன்வாடிக்குள் வைத்திருந்த பொதிகளை பொலிஸார் சோதனை செய்தனர். அதன் போது புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு உபயோகப்படும் மருந்து வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான மருந்துகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 43 பொருட்களை மக்கள் பார்வையிட்டனர்

  • Aug 6, 2025 - 07:32 PM
  • 0 Comments

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்ட வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 54 பிற பொருட்களில் 43 பொருட்கள் 2025 ஆகஸ்ட் 5 பிற்பகல் பொதுமக்களுக்கு, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமையுடன் காட்டப்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இதில் பங்கேற்றும், 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடிய தங்கள் உறவினர்களின் எந்தப் பொருளையும் அடையாளம் […]

உள்ளூர் செய்திகள்

சோமரத்ன ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்தென்கிறார் அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஸ

  • Aug 6, 2025 - 12:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாக, கிருஸாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபகஸ் தெரிவித்துள்ளார். இதனை அவரது மனைவி எஸ்.சி. விஜேவிக்ரம, ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   அக்கடிதத்தில், யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட சித்திரவதைக்கூடங்கள் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் இன்று மேலும் 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு

  • Aug 4, 2025 - 07:41 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வாய்வில், இன்றைய தினம் (ஓகஸ்ட் 4) புதிதாக 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனுடன், ஏற்கனவே கண்டறியப்பட்ட 6 தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக கடந்த 15 நாட்களாக இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதியாக நடைபெறும் அகழ்வில், இன்றைய தினம் வரையிலான கணக்கில் 61 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மனநல ஆலோசனை வழங்கப்படவுள்ளது

  • Aug 4, 2025 - 07:21 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அகழ்வாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள்இ பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் முன்னிலையில் நாளை (ஓகஸ்ட் 5) பிற்பகல் 1.30 முதல் மாலை 5 வரை காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம்இ ‘பொருட்களை அடையாளம் காண வரக்கூடிய பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைஇ மருத்துவ சேவைகள்இ உளவள உதவிகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளார்

  • Aug 4, 2025 - 11:22 AM
  • 0 Comments

குருணாகலின் வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07) இடம்பெற்றது. 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய மகள் கைதுசெய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வாரியபொல பொலிஸாரால் தொடரப்பட்டு வருகின்றன.    

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp