உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் இன்று நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார்.

  • Aug 26, 2025 - 08:05 AM
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதவான்; நீதிமன்ற நீதிபதி நிலுபுலி லங்கபுரா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை அதாவது இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். இன்று (26) நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாவது அவசியம் என தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அவரது உடல்நிலை காரணமாக சிறைச்சாலையினர் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐஊரு) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர், அவர் முதலில் […]

உள்ளூர் செய்திகள்

மட்டு களுவாஞ்சிக்குடியில் ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பியவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை அகழ நீதிமன்றம் அனுமதி

  • Aug 26, 2025 - 07:00 AM
  • 0 Comments

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம், குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி உள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கே இப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் சார்பில் யு.ஆ.ஆ. ரவூப், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவ இடத்தில் […]

உள்ளூர் செய்திகள்

ரணிலுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என ஆராய சஜித் தலைமையில் கட்சி கூடுகின்றது

  • Aug 25, 2025 - 09:25 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிக ஆதரவு வழங்குவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று கூட்டம் நடத்தவுள்ளது. தற்போது அவர் விளக்கமறியலில் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து கைது நடவடிக்கையை கண்டித்து வருகின்றன. நேற்று (24) கொழும்பில் பல கட்சிகள் ஒன்று கூடி, விக்கிரமசிங்க கைது ‘ஜனநாயக விரோத செயல்’ மற்றும் ‘அரசியல் பழிவாங்கல்’ என்று விமர்சித்தன. எனினும், சஜித் பிரேமதாசா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரா அந்த ஊடகச் சந்திப்பில் […]

உள்ளூர் செய்திகள்

அநுர அரசின் அசமந்த போக்கினால் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

  • Aug 25, 2025 - 09:04 AM
  • 0 Comments

மருத்துவர்களின் இடமாற்றத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய அபாய நிலை காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவுகள், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக நோய் பிரிவுகள், இராணுவ வைத்தியசாலை, தேசிய மனநல வைத்திய நிறுவனம் போன்ற முக்கிய பிரிவுகளின் சேவைகள் இடையூறு இன்றிப் செயற்;படும் என சங்கம் அறிவித்துள்ளது. அரச மருத்துவ […]

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பில் 1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்று நினைவேந்தப்பட்டனர்

  • Aug 24, 2025 - 08:15 PM
  • 0 Comments

1990ஆம் ஆண்டு சித்தாண்டி பகுதியில் நடைபெற்ற சுற்றிவளைப்பின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் நிகழ்வு இன்று சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி கோவில் முன்றலில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தலை சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி அ.அ. அமலநாயகி, சட்டத்தரணி த. ஜெயசிங்கம், பிரதேச சபை உறுப்பினர் சி. வவானந்தன், சித்தாண்டி, முறக்கொட்டசேனை, சந்திவெளி பகுதிகளிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், […]

உள்ளூர் செய்திகள்

சுமந்திரன் யாழில் இருந்து பேசுகிறாரா அல்லது ரணில் வீட்டிருந்து பேசுகிறாரா என பிமல் ரத்நாயக்க கேள்வி

  • Aug 24, 2025 - 07:53 PM
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் தெரிவித்திருப்பது கவலைக்கிடமானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், ‘சுமந்திரன் யாழிலிருந்தே பேசுகிறாரா, இல்லை ரணிலின் இல்லத்திலிருந்தே பேசுகிறாரா?’ என்று கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது: ‘கறுப்பு ஜூலை கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்க வேண்டும். அதோடு, மத்திய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணிலுக்கு பிணை வழங்காமைக்கு குமுருகிறார் சுமந்திரன்

  • Aug 23, 2025 - 07:16 PM
  • 0 Comments

பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் யாரும் மேலானவர்கள் அல்ல என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்த பின்பு, அவருக்கு பிணை வழங்குவதை எதிர்த்தது முறையான ஆலோசனை அற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  • Aug 23, 2025 - 07:04 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் பயணம் மேற்கொள்வதற்காக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சாட்டிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (22-08) அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

  • Aug 23, 2025 - 07:50 AM
  • 0 Comments

கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். 2023 செப்டம்பரில், ஹவானாவில் நடைபெற்ற பு77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின் லண்டன் பயணத்தில் அவர் தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதாகவும், அப்பயணத்தில் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நேற்று காலை […]

உள்ளூர் செய்திகள்

பிரசரும் சுகரும் கூடியதையடுத்து ரணில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

  • Aug 23, 2025 - 07:17 AM
  • 0 Comments

சிறை காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp