உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாதாள உலக கோஷ்டி கொழும்புக்கு இழுத்துவரப்பட்டனர்

  • Aug 30, 2025 - 08:17 PM
  • 0 Comments

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரகள்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்

  • Aug 30, 2025 - 07:41 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அதே நாளில் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அவர் அங்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி, கடந்த 26ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரை விடுவிக்கும் உத்தரவு, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவால் பிறப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகள், மேலும் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் […]

உள்ளூர் செய்திகள்

யாழ் செம்மணியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன

  • Aug 29, 2025 - 08:04 PM
  • 0 Comments

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை மொத்தம் 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 174 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 37வது நாளாக தொடர்ந்தன. இந்த பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் ஏ9 வீதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு

  • Aug 29, 2025 - 11:14 AM
  • 0 Comments

கிளிநொச்சி ஏ9 வீதியில், கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடத்தில் இன்று  அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேரூந்து பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த ரிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், ரிப்பருக்கு […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்

  • Aug 29, 2025 - 11:00 AM
  • 0 Comments

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜராகியதை தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்காக தன்னை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. இதனையடுத்து, இன்று காலை ஆஜரான பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கெதிராகவே தொழில்சங்க போராட்டம்- சம்பத் பிரேமரத்ன

  • Aug 29, 2025 - 07:59 AM
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபையின் (ளுடுவுடீ) சில தொழிற்சங்கங்கள் தங்களது நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தன. முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜனபலவேகயாவுடன் இணைந்துள்ள ளுடுவுடீ ‘சமகி தலைவரான நிரோஷன் சம்பத் பிரேமரத்னே, அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் (Nவுஊ) தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக, அரச மற்றும் தனியார் பஸ்களுக்கு ஒருங்கிணைந்த பேருந்து நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அவர்களின் எதிர்ப்புக்குரிய முக்கிய காரணமாகும். இதுகுறித்து தனியார் பேருந்து […]

உள்ளூர் செய்திகள்

இன, மத அடிப்படையிலான கட்சியாக அரசியல் கட்சிகள் பதிவதற்கு தடை- தேர்தல் ஆணைக்குழு

  • Aug 28, 2025 - 09:17 AM
  • 0 Comments

தேர்தல் ஆணைக்குழு இன அல்லது மத நோக்கங்களுடன் புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஊடகங்களிடம் கூறியதாவது: ‘அரசியல் கட்சிகள் பதிவு செய்யும் போது, அவை இன அல்லது மத அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பதை நாங்கள் பரிசோதிக்கிறோம். இதற்கு உரிய சட்டப் பிரிவுகள் உள்ளன. சந்தேகம் இருந்தால் அவற்றின் படி நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியல் […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணியில் இதுவரை 166 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

  • Aug 28, 2025 - 09:04 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள சிந்து பாத்தி மயானம் அருகே அமைந்துள்ள புதைகுழியில் இருந்து இதுவரை மொத்தம் 166 மனித எலும்புக்கூடுகள் அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வின் ஐந்தாவது கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இது எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் ஆய்வுகளின் அடிப்படையில் இப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அகழாய்வு யாழ்ப்பாண நிதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இதில் கௌரவ […]

உள்ளூர் செய்திகள்

மக்கள் ஆட்சியில் இல்லாத மாகாண சபை ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல-தேர்தல்கள் ஆணையாளர்

  • Aug 27, 2025 - 05:58 AM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உறுதியான சட்டம் தற்போது இல்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, மாகாண சபைத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. எனவே, அவ்விதமான தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜனநாயக முறைமைக்கமைய தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் அவர் வலியுறுத்தினார். தேர்தல் முறைமை குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் மேலும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான “Z” வெட்டுப் புள்ளி வெளியிடப்பட்டது

  • Aug 26, 2025 - 08:27 AM
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறியில் இணைவதற்கு தேவையான குறைந்தபட்ச “Z” மதிப்பெண்கள் தொடர்புடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் பின்வரும் முறைகள் மூலம் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி மற்றும் பல்கலைக்கழகத்தை தெரிவுசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள. 1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் இணையதளம்: www.ugc.ac.lk 2. பல்கலைக்கழக மானியங்கள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp