உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

  • Jan 2, 2025 - 01:49 AM
  • 0 Comments

நேற்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில், விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட உட்பட்ச எண்ணிக்கை ஆகும். மேலும் இதன்போது, போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக சட்டம் அமுல்படுத்தப்பட்ட சாரதிகளின் மொத்த எண்ணிக்கை 7,264 ஆகும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. […]

செய்திகள்

பொதுமக்களை கொல்லவிரும்பவில்லையாம் – சவேந்திர சில்வா

  • Jan 1, 2025 - 01:01 PM
  • 0 Comments

அரகலயவின் போது ஆயுதமேந்தாத பொதுமக்களை கொலை செய்வதற்கு தான் விரும்பவில்லை, என ஓய்வு பெற்ற இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா தனது ஓய்விற்கு முன்னர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் 2022 அரகலய உட்பட தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ ஆபத்து ஏற்பட்டால் தேசத்தை பாதுகாப்பதற்காக தயாராகயிருக்கும் உத்தியோகபூர்வ இராணுவமே தேசத்தின் இராணுவம் என அவர் தெரிவித்துள்ளார். ஆவர் மேலும் தெரிவிக்கையில் 2022 எழுச்சி ஒரு உள்நாட்டு […]

செய்திகள்

இங்கிலாந்து செல்ல முற்பட்ட தமிழர் கட்டுநாயக்காவில்கைது கைது!

  • Jan 1, 2025 - 12:19 PM
  • 0 Comments

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நேபாளம் ஊடாக இங்கிலாந்து செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று ( டிசம்பர் 31) கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 39 வயதுடைய மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சந்தேக நபர் நேபாளத்திற்குச் செல்லும் இந்திய விமான சேவையில் பயணிப்பதற்காக நேற்று விமான நிலையத்திற்கு வந்திருந்தார், ஆனால் குடிவரவு கருமபீடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். குடிவரவு கருமபீட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை […]

செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதிக்கவில்லையென்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

  • Dec 31, 2024 - 09:28 PM
  • 0 Comments

நாட்டின் வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவத்தில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் சில விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிக்கல் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (31) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள பொறிமுறைக்கு உட்பட்டு தான் நிவாரண திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதேவேளை நாணய நிதியம் மாற்றங்களை ஏற்படுத்த முடியாத […]

செய்திகள்

அச்சக திணைக்கள இணையம் மீதும் சைபர் தாக்குதல்

  • Dec 31, 2024 - 09:59 AM
  • 0 Comments

அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதில் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கணினி அவசரகால பதில் குழு தெரிவித்துள்ளது. அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டு அதன் தரவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசையும் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஊற்கனவே தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட யூடியூப் சேனலில் […]

செய்திகள்

பொலிஸிக்கு தண்ணி காட்டிய ஹேக்கர்ஸ்

  • Dec 31, 2024 - 09:44 AM
  • 0 Comments

பொலிஸாரின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இப்போது அதன் கட்டுப்பாடு அதன் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிட்டது. இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தமது முகநூல் பக்கத்தில் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்

செய்திகள்

சிறைச்சாலைகளில் போதைப்பொருட்களுக்கு இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதி பணிப்புரை!

  • Dec 30, 2024 - 10:03 PM
  • 0 Comments

கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கினார். அத்துடன் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, அதற்காக இணையவழி (ஒன்லைன்) முறையைப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார். ஒன்லைன் முறையின் ஊடாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து அது தொடர்பான […]

செய்திகள்

புதிய இராணுவ கடற்படை தளபதிகள் நாளை பதவியேற்கவுள்ளனர்

  • Dec 30, 2024 - 09:23 PM
  • 0 Comments

இராணுவம்இ கடற்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் சேவை நீடிப்பு நிறைவடைந்துள்ளதோடுஇ விமானப்படை தளபதியின் சேவை நீடிப்பு அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது. அதற்கமைய நாளை புதன்கிழமை இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள் பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் ஓய்வையடுத்துஇ இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார். மேலும் கடற்படையின் தலைமை அதிகாரியான ரியர் அட்மிரல் காஞ்சன பனகொட கடற்படையின் 26 […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)29.12.2024

  • Dec 30, 2024 - 12:42 AM
  • 0 Comments

சீனாவிடம் என்ன கோரிக்கை வைப்பது அநுர தீவிர ஆலோசனையில் சீனா சகோதர பாசத்தை திருகோணமலையில் வெளிப்படுத்தியது மியன்மார் அகதிகளை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழுக்கு அனுமதி மறுப்பு பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா ஓய்வு பெறுகிறார் அரச அதிகாரிகளோட போராட வேண்டியுள்ளது அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கவலை https://youtu.be/o3y03limmaE

செய்திகள்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா ஓய்வு பெறுகிறார்

  • Dec 29, 2024 - 10:00 PM
  • 0 Comments

இலங்கையின் பாதுகாப்பிற்கு பங்களிப்பை வழங்கிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, கடந்த 2020 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சேவையாற்றினார். இவர் இலங்கை இராணுவத்தில் தியத்தலாவவிலுள்ள இலங்கை இராணுவ பீடத்தில் 19 ஆவது அதிகாரி கேடட் ஆட்சேர்ப்பு பாடநெறியில் 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சேர்ந்தார். சவேந்திர சில்வா இலங்கையில் நடைபெற்ற யுத்த நடவடிக்கையில் விசேடமாக செயற்பட்டிருந்தார். 58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார். பின்னர் 2019 […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp