அரசியலமைப்பு வரைவுக்காக 7 பேரை நியமித்துள்ளதாக தமிழரசுக் கட்சி தெரிவிப்பு
இலங்கை தமிழ் அரசு கட்சி இறுதியாக கோட்டாபய ராஜபகஸ அரசாங்கத்தின் நிபுணர் குழுவுக்கு சமர்ப்பித்த அரசியலமைப்பு வரைவினை அடிப்படையாகக் கொண்டு மேலதிக உள்ளடக்கங்களை ஆராய்வதற்காக கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, கட்சி மட்டத்திலும் துறைசார்ந்த நிபுணர்கள் மட்டத்திலும் ஆராய்ந்து மேம்பட்ட வரைவினை இறுதி செய்ததன் பின்னர் அடுத்தகட்டமாக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தமிழ் அரசு கட்சி தயாராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]









