யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஏற்பட்ட நிலை!
யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ். புறநகர் பகுதியில் உள்ள யுவதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அண்மையில் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த யுவதியால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கைது செய்து ,விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றில் […]









