உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை இஸ்ரேல் போட்டுதள்ளியது?

  • Jan 23, 2025 - 08:27 AM
  • 0 Comments

ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கிடையே, இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி; சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஸேக் முகமது அலி ஹமாதி. அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். கடந்த 1985-ல் 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து […]

இந்தியா

சீமானுக்கு எதிராக போராடிவர்களில் 878 பேர் மீது வழக்குப் பதிவு

  • Jan 23, 2025 - 08:18 AM
  • 0 Comments

தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஸ்ணன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே அறிவித்தப்படி சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர். மேலும், சீமான் உருவப்படத்தை […]

இந்தியா

மனைவியை கொலை செய்து அவயங்களை வெட்டி குக்கரில் வேக வைத்த கணவன் கைது

  • Jan 23, 2025 - 08:02 AM
  • 0 Comments

ஐதராபாத்தில் மனைவியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 35 வயதுடைய தனது மகள் ஒருவாரமாக காணவில்லை என்று பெற்றோர் போலீசில் முறைப்பாடு செய்தனர் அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய போலீசாருக்கு பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவத்தன்று கணவனுக்கும் […]

செய்திகள்

மருதானை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபரான பெண்ணொருவர் தற்கொலை!

  • Jan 22, 2025 - 08:56 PM
  • 0 Comments

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் இந்தச் சம்பவம் இன்று (22) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

மத்திய வங்கி கொள்ளையரான அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர முடியாதென கையை விரித்தார் ஜனாதிபதி

  • Jan 22, 2025 - 01:28 PM
  • 0 Comments

மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மத்திய வங்கி கொள்ளையர்களில் ஒருவரான அர்ஜூன மகேந்திரன் சிங்கபூரில் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றார் அவரை இலங்கைக்கு கொண்டு வரமுடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக ஜனாதிபதி கையை விரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த முயற்சிக்கவுள்ளதாக அவர் மேலும் […]

முக்கிய செய்திகள்

சட்டத்தரணி சுமந்திரனை விசாரணைக்குட்படுத்துமாறு சிறிதரன் எம்பி பாராளுமன்றத்தில் முழக்கம்

  • Jan 22, 2025 - 05:03 AM
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டை பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளார் என்ற தொனிப்பிட சிறிதரன் நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி போராடுவதற்காக பாராளுமன்றம் அனுப்பபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனக்கு சுமந்திரனிடமிருந்து நீதி வேண்டி நேற்று பாராளுமன்றத்pல் சபாநாயகரிடம் விநயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் […]

செய்திகள்

இராணுவத்தினரும் பொலிஸாருமே துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர்- அமைச்சர் ஆனந்த விஜேபால

  • Jan 21, 2025 - 07:15 PM
  • 0 Comments

அண்மைய காலங்களில் நாடெங்கும் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில்; ஒரு இராணுவ மேஜர், உட்பட 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் குற்றச் செயல்கள் தொடர்பில் நீண்டநேரம் விளக்கமளித்த அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மக்கள […]

செய்திகள்

யாழ் பருத்தித்துறை கடலில் கடற்படையினர் 2 நாள் பயிற்சி மீன்பிடிக்க தடை

  • Jan 21, 2025 - 03:25 PM
  • 0 Comments

வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படையினர் சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

நாடு முழுவதிலும் 55 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது

  • Jan 21, 2025 - 11:03 AM
  • 0 Comments

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் தொடா மழையினால் பெரிய மற்றும் நடுத்தர நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 55 நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதோடு, 60 க்கும் மேற்பட்ட குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றமை குறிப்பிடத்தக்கது. பின்வரும் ஏனைய மாவட்டங்களில் குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்து காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம்: 9 குளங்களில் 8 […]

உலகம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடுமையான குளிர் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

  • Jan 21, 2025 - 07:25 AM
  • 0 Comments

கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குளிர் காற்றுடன் கூடிய குளிர்ந்த கால நிலை நாள் சில பகுதிகளில் மறை 40 பாகை செல்சியஸ் அளவிலான குளிரான வெப்பநிலையை உணர நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டொரன்டோவின் பல்வேறு இடங்களிலும் இதே விதமாக கடும் குளிர் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்றைய எதிர்வரும் நாளைய தினமும் புதன்கிழமையும் கடுமையான குளிர் உடன் கூடிய வானிலையை எதிர்கொள்ள நேரிடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp