உள்ளூர் செய்திகள்

அநுர அரசுக்கு எதிராக மெதுவாக கிளர்தெழ ஆரம்பிக்கும் பிக்குகள்.

  • Aug 26, 2025 - 07:33 AM
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (ஆழரு) பொதுமக்கள் முன் வெளியிட வேண்டும் என இலங்கை பல்கலைக்கழக பிக்கு பேரவை (IUBF) ஜனாதிபதி செயல்மரப்பிற்கு கடிதம் ஒன்றை நேற்று (25-08) கையளித்துள்ளது. IUBFஒருங்கிணைப்பாளர் மதிரிகிரியே இச்ஸரதம்ம தேரர் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது: ‘இந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வருகை தந்தபோது, இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சில ஊடகங்கள் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாகவும், சிலர் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச தலையீடு தேவையில்லையென பிரதி அமைச்சர் முனீர் முலாஃபார் தெரிவிப்பு

  • Aug 26, 2025 - 07:18 AM
  • 0 Comments

செம்மணி புதைகுழி விசாரணைக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை எந்த ஒரு நாட்டிடமும் உதவி கோரப்படவில்லை. தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர் முனீர் முலாஃபார் தெரிவித்துள்ளார் ‘செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பரிசோதிப்பதற்காக சர்வதேச நிபுணர்களின் தொழில்நுட்ப உதவி தேவைப்படுகிறது. இதற்கான விவாதங்கள் தற்போது நீதியமைச்சு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு சார்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இதுவரை எந்த ஒரு நாட்டுக்கும் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்படவில்லை’ எனக் குறிப்பிட்டார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

65 நூல்களின் அறிமுகமும் கண்காட்சியும் சம்மாந்துறையில் நடைப்பெற்றது

  • Aug 24, 2025 - 09:29 AM
  • 0 Comments

(நூருல் ஹுதா உமர்) பேராசிரியர், கலாநிதி எஸ்.எல். றியாஸ் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளில் எழுதிய 65 நூல்களின் அறிமுகமும் கண்காட்சியும் நேற்று (23-08) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு பன்னூலாசிரியர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது தலைமையில் இடம்பெற்றது. 1996ஆம் ஆண்டு நவமணி பத்திரிகையில் கிழக்கு மாகாண செய்தியாளராக பணியாற்றத் தொடங்கிய எஸ்.எல். றியாஸ், தனது எழுத்து பணி மூலம் ஊடக உலகில் பிரகாசித்தார். அதே ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி மற்றொருவர் காயம்

  • Aug 24, 2025 - 09:19 AM
  • 0 Comments

கொழும்பு புறநகர் பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் மாலனி புளத்சிங்கள வீதியில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர் கல்கிஸ்ஸையைச் சேர்ந்த கிஹான் துலான் பெரேரா (25) என அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முன்னதாக பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் இன்றும் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

  • Aug 21, 2025 - 08:37 PM
  • 0 Comments

இந்தச் சம்பவம் பண்டாரகம துன்போதிய பாலத்திற்கு அருகில் இன்று மாலை சுமார் 6.00 மணியளவில் இடம்பெற்றது. அடையாளம் தெரியாத ஒருவர் காரில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. டி-56 வகை துப்பாக்கி பயன்படுத்தி, குறித்த நபர் மீது 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர

இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

த.வெ.க.வின் இரண்டாவது மாநாட்டிற்கு வந்த தொண்டர்களால் மதுரையே அதிர்ந்தது

  • Aug 21, 2025 - 06:40 PM
  • 0 Comments

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநாடு இன்று மாலை மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தியில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர் என எதிர்பார்க்கப்படுவதால்இ கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியும் இத்தகைய பரந்த பரப்பளவிலான மைதானத்தில் மாநாடு நடத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ள திடலில்இ 250 ஏக்கர் மாநாட்டிற்காக […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரனை தேவையென ரவிகரன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்

  • Aug 21, 2025 - 06:05 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சுயாதீனமான பன்னாட்டு நீதி விசாரணை அவசியம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, இராணுவம் மேற்கொண்ட கொடூரச் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருப்பதை நினைவுகூர்ந்தார். அவர் வழங்கிய பி2899 என்ற வழக்கு, தற்போதைய செம்மணி புதைகுழி விசாரணைகளுடன் இணைக்கப்பட வேண்டும் […]

உள்ளூர் செய்திகள்

பிரதமர் பதவியில் மாற்றமா? மனம் திறந்தார் பிரதமர் ஹரிணி

  • Aug 16, 2025 - 09:34 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசில் குழப்பம் உள்ளது என எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி ஆட்சியை பிடிக்கக் கூடாது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள் அளித்த அமோக ஆதரவை பெற்ற அரசை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். பிரதமரை மாற்ற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது ஜனாதிபதியின் முடிவில் இருக்கும். இதுபற்றிய எந்த அவசரமும் எதிர்க்கட்சிகளுக்கு தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார் பிரதமர் பதவியை எந்த சந்தர்ப்பத்திலும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பு ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து நெரிசல்

  • Aug 15, 2025 - 06:48 PM
  • 0 Comments

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்தும், கொழும்பு பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை பொது மயானத்திலிருந்து பொரளை சந்தி நோக்கி செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

சட்டவிரோத படுகொலைகள் இலங்கையில் தொடர்கின்றன – மனித உரிமை ஆணைக்குழு கவலை

  • Aug 13, 2025 - 10:53 AM
  • 0 Comments

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவர அறிக்கையில், கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அறிக்கையில், பொலிஸாரின் காவலில் இருந்தபோது பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றபோது பல்வேறு கொலைச்சம்பவங்கள் நடந்ததாகவும், இந்நேரங்களில் சந்தேகநபர்கள் தங்களை தாக்கினர் அல்லது தப்பிக்க முயன்றனர் என்றே பொலிஸார் விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp