செய்திகள்

மத்திய மாகாண ஆளுநரை தென்கொரிய தூதுவர் சந்தித்துள்ளார்

  • Nov 21, 2024 - 10:54 AM
  • 0 Comments

மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது. இரு நாட்டினதும் நட்புறவு, கல்வி கலாச்சார, சமய, விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன், இலங்கையில் தென்கொரியா செய்துள்ள முதலீடுகள் தொடர்பாகவும்,கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

செய்திகள்

தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்- வி.எஸ்.சிவகரன்.

  • Nov 16, 2024 - 10:18 AM
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று சனிக்கிழமை (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கிறது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஆடசியாளர்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பை தொடர்ச்சியாக மென் வலுவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். சிங்கள பேரினவாதம் அவ்வாறு செயற்படுகின்ற Nபுhது தமிழர் தரப்பு பிரிந்து நின்று அதனை […]

உள்ளூர் செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி அநுர

  • Nov 12, 2024 - 01:41 AM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுகிழமை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. குறித்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டதாகவும் ஊடகங்களும் […]

உலகம் செய்திகள்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

  • Nov 9, 2024 - 02:59 PM
  • 0 Comments

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து முரண்பாடு ஆரம்பமானது அணிமையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கனடா அறிவித்ததையடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் […]

செய்திகள்

டிரம்பை கொல்ல செய்ய திட்டமிட்டவரே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார் – அமெரிக்கா.

  • Nov 9, 2024 - 02:35 PM
  • 0 Comments

  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிட்ட போது அவரை கொலை செய்ய திட்டமிட்டவரிடமே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. குறித்த நபரிடம் இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த […]

செய்திகள்

முன்னாள் எம்பி ஆனந்தனையும் செல்வத்தையும் பற்றிய எல்லா உண்மைகளை சொல்லவேண்டி வரும். எமில்காந்தன்.

  • Nov 4, 2024 - 02:36 PM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம்அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது முழு வரலாற்றையும் வெளியே சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாமென வன்னி மாவட்ட சுயேட்சை வேட்பாளரான எமில்காந்தன் தெரிவித்துள்ளார் வவுனியாவில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னி தேர்தல் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது ஆதரவாளர்கள் தமது சின்னமான கோடாலிச் சின்னத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கிறார்கள் என […]

செய்திகள்

யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு நினைவுத்தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்.

  • Nov 4, 2024 - 12:38 PM
  • 0 Comments

கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை மற்றும் சம உரிமையின்மை ஆகிய காரணிகளால் யுத்தம் தோற்றம் பெற்று பலரையும் காவு கொண்டது இந்த யுத்தத்தால் தமிழ் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் யுத்தம் மௌனித்து 15 […]

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் ஜாதகம் பார்ப்பதாக வந்த பெண்ணின் திருவிளையாடல்.

  • Oct 28, 2024 - 02:13 AM
  • 0 Comments

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த […]

செய்திகள்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் முதியவரின் சடலம் மீட்பு.

  • Oct 27, 2024 - 05:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த வயோதிபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 79 வயதுடைய திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நேற்று (26) டெங்கு ஒழிப்பு கள விஜயத்தின் போதே முதியவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார், அதிகாரிகள் முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் இறந்து போயுள்ளார். உடனடியாக அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ […]

செய்திகள்

இணையவழி மோசடிகள் குறித்து மக்கள் விளிப்பாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை.

  • Oct 27, 2024 - 04:54 PM
  • 0 Comments

இணையம் ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள்; அதிகரித்து வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையம் ஊடாக மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டினரும் நம் நாட்டவர்களும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை தவிரவும் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர வயது மற்றும் முதியவர்களுடன் போலியான காதல் உறவுகளை உருவாக்கியும் பணமோசடி நடைப்பெற்று வருகின்றது. அத்துடன் சமூகத்தில் பிரபலமானவர்கள் போல் பாசாங்கு காட்டி பணம் பெறும் செயற்பாடுகளும் இந்த நாட்களில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp