முக்கிய செய்திகள்

21 ஆயிரம் பொலிஸாரே உள்ளனர், ஆகையால் அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்- ஜனாதிபதி

  • Jan 19, 2025 - 09:41 PM
  • 0 Comments

மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய, ஊழல் நிறைந்த அரசியலை ஒழிக்க பாடுபடுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். களுத்துறை, கட்டுகுருந்த, வெட்டுமகட பாகிஸ்தான் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். ‘நாங்கள் நவம்பர் 21 ஆம் தேதி அமைச்சரவையில் 21 அமைச்சர்களுடன் பதவிப் […]

இந்தியா

தமிழகத்தில் மகனை துணை முதலமைச்சர் ஆக்கியதுதான் ஸ்டாலினின் சாதனை- எடப்பாடி பழனிசாமி

  • Jan 19, 2025 - 05:05 AM
  • 0 Comments

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது. எம்.ஜி.ஆர்இ ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தாம் வாரிசு. நான் என்ன மிட்டா மிராசாஇ தொழிலதிபரா? சாதாரண தொண்டன். கட்சிக்கு உழைத்துஇ விஸ்வாசமா இருந்தா கதவ தட்டி பதவி கொடுக்குற கட்சிதான் அ.தி.மு.க. சட்டசபை தேர்தலில் 522 அறிவிப்பை வெளியிட்ட தி.மு.க. அரசுஇ அதில் 20 […]

செய்திகள்

போரில் வீரமரணமடைந்த இராணுவத்தினரின் குடும்ப நலனுக்கான சிறப்பு கலந்துரையாடல் நடைப்பெற்றது

  • Jan 18, 2025 - 06:30 PM
  • 0 Comments

வீரமரணம் அடைந்த மற்றும் போர்வீரர்களின் குடும்ப நலனுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, முன்னைய தீர்மானங்களின் முன்னேற்றம் மற்றும் தியாகிகள் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவர்களின் நலனுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனுள்ள மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவது உறுதிசெய்யப்பட்டது. குழுவில் பாதுகாப்பு மற்றும் நிதி துறையினரும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். ‘  

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண முதலாளிகள் அவர்களின் ஊழியர்களை ஏமாற்றிவருகின்றார்கள் என முறைப்பாடு

  • Jan 17, 2025 - 07:08 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனங்கள் பல அதன் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு பணம் கட்டுவது கூறியுள்ள போதும் அதற்கான பணம், சம்பளத்திலிருந்து பெறப்பட்டாலும், கட்டியதற்கான பற்றுச்சிட்டுகளோ, அல்லது வைப்பிலிட்டமைக்கான ஆதாரங்கள் வழங்காது ஊழியர்களை ஏமாற்றி அவர்களிடம் வேலை வாங்கி வருவதாக ஊழியர்கள் பலர் ஊழியர் சேமலாப நிதியம் உதவி பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்கள். குறித்த விடயங்கள் தொடர்பில் ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘யாழ்ப்பாணத்தில் நாம் ஒரு நிறுவனத்தில் பல […]

செய்திகள்

ஈழத் தமிழ் நாடக அரங்க ஆளுமைகளின் பெருநூல் தொகுப்பு

  • Jan 17, 2025 - 02:46 PM
  • 0 Comments

தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் நாடக அரங்கக் கலை ஆளுமைகளின் கலையுலக வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பாக ‘ஈழத்து நாடக அரங்க ஆளுமைகள்’ என்னும் பெருநூலினை ‘ சங்கநாதம்’ கலையகத்தினர் உருவாக்க உள்ளதனை அனைத்து கலைஞர்களுக்கும் தெரிவிக்கின்றனர் இந் நூல் ஈழத் தமிழ் நாடக அரங்கக் கலை வளர்ச்சிப்போக்கினச் சொல்லும் வரலாற்று ஆவணமாக இத்துறையில் ஈடுபட்டிருந்தோர் மற்றும் இயங்குவோரின் கலையுலக வாழ்கை வரலாற்றின் எழுத்துப் பதிவாகவே இடம்பெற இருப்பதை கவனத்திற் கொள்ளளாம். இந் […]

முக்கிய செய்திகள்

வடக்கு மீனவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்- முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்

  • Jan 17, 2025 - 08:58 AM
  • 0 Comments

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற அயலவர்கள் நிகழ்வில் பங்கேற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் பேசாமை தொடர்பில் அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!

  • Jan 14, 2025 - 10:11 PM
  • 0 Comments

அடுத்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்>இலங்கையில் […]

முக்கிய செய்திகள்

அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை- – நீதி அமைச்சர்

  • Jan 14, 2025 - 01:30 PM
  • 0 Comments

நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வீரகேசரியிடம் தெரிவித்தார். அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நீண்ட காலமாகவும், சில வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

  • Jan 12, 2025 - 11:21 PM
  • 0 Comments

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை […]

முக்கிய செய்திகள்

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

  • Jan 12, 2025 - 01:00 PM
  • 0 Comments

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி.அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.    

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp