உலகம் செய்திகள்

இஸ்ரேலின் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் – கத்தார் பிரதமர் வலியுறுத்தல்

  • Sep 15, 2025 - 07:00 AM
  • 0 Comments

இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாடு காட்டுவதை நிறுத்தி, அதன் குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துர் ரஹ்மான் அல் தானி வலியுறுத்தினார். செப்டம்பர் 14 ஆம் திகதி, டோஹாவில் ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட முன்னெப்போதும் இல்லாத வான்வழித் தாக்குதலை அடுத்து, கத்தார் ஏற்பாடு செய்த அவசர அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் முன்னோடி கூட்டத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று உயிரிழந்த பெண்ணின் வழக்கை எந்த பொலிஸ் பிரிவு கையாள்வதென குழப்பம்

  • Aug 10, 2025 - 05:27 PM
  • 0 Comments

கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று முன்பகல் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிந்தைய விசாரணையில், விபத்து நிகழ்ந்த பகுதி எந்தப் பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பது தொடர்பாகப் பொலிஸாரிடையே கடும் குழப்பம் ஏற்பட்டது. விபத்து நடந்த இடம் அக்கராயன், கிளிநொச்சி அல்லது மாங்குளம் பொலிஸ் பிரிவில் எதற்குட்பட்டது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் சிக்கினர். இந்தத் தெளிவின்மை காரணமாக பொலிஸ் நடவடிக்கைகள் தாமதமடைந்ததோடு, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் முரண்களை இரு சமூக தலைவர்களும் தீர்க்கமுடியும்- ரிஸாட் பதியுதீன் எம்.பி.

  • Aug 6, 2025 - 07:19 PM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்வைத்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் தொடர்பான பிரேரணை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தாலும், அவற்றுக்கு தீர்வு கிடைப்பதில்லை எனவும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் இவ்விடயங்களைத் தீர்க்கும் முயற்சியை விட, அவற்றை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தும் நோக்கம் அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அனுபவங்கள் இதை தெளிவாக காட்டுகின்றன என்றும் கூறினார். ஓட்டமாவடி பிரதேச சபையை தமது கட்சியே வென்றிருந்த போதும், ஆட்சி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மகிந்தவின் பெறாமகன் சஸிந்திர ராஜபக்ச விளக்கமறியல்

  • Aug 6, 2025 - 07:08 PM
  • 0 Comments

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) காலை சஷிந்திர ராஜபக்சவை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள்

பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை அதானியின் மின் கோபுர பாகங்கள் மன்னரை வந்தடைந்தது

  • Aug 6, 2025 - 02:12 PM
  • 0 Comments

காற்றாலை மின் கோபுர பாகங்களை ஏற்றிய பாரிய வாகனங்கள், மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்துள்ளன. இந்த காற்றாலை மின் கோபுர பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது எனக் கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (3-08) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் போராட்டம் நீடித்தது. நேற்றைய தினம் (5-08) காலை மன்னார் பஜார் […]

உலகம் உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரஸ்சியாவில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து ஆழிப்ரேரலை உருவானது

  • Jul 30, 2025 - 05:39 PM
  • 0 Comments

ரஸ்சியாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், பெட்ரோ பாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்க் நகரத்திலிருந்து சுமார் 136 கிலோமீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டது. அதின் தாக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி, மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். வீடுகளில் உள்ள பொருட்கள் தரையில் சரிந்து விழுந்தன் ஜன்னல்கள் உடைந்தன் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. துரிதமாக மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கான சாட்சி – அருட்தந்தை மா.சத்திவேல்

  • Jul 29, 2025 - 07:04 PM
  • 0 Comments

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை பார்த்தறிந்துள்ளனர்

  • Jul 29, 2025 - 06:28 PM
  • 0 Comments

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள்இ கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்இ இளைஞர் அணி தலைவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் டெல்லிஇ பீகார்இ கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இக்குழுஇ அபிவிருத்தி திட்டங்கள்இ பொருளாதார நவீனத்துவம்இ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்இ ஜனநாயக பாரம்பரியம் மற்றும் கலாசார […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் கோல் கம்பம் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு

  • Jul 21, 2025 - 01:25 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது கோல் கம்பம் விழுந்து 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (20), குறித்த மைதானத்தில் நடத்திய உதைப்பந்தாட்டத்தில் கலந்து கொண்ட யுவராஜ் செபஸ்தியாம்பிள்ளை என்பவர் மீது கோல் கம்பம் திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நாவாந்துறை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை ‘ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

  • Jul 15, 2025 - 08:26 PM
  • 0 Comments

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், தபால் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மத்தியரவு (15) முதல் அனைத்து அதிபடி வேலைகளிலிருந்தும் விலகும் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் பின்னர் திட்டமிட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு வராததை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கோரவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்கம் கூறியுள்ளது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp