உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை, வங்காளதேசம், நேபாள ஆட்சிமாற்றத்துக்கு இதுவே காரணமென்கிறார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

  • Nov 1, 2025 - 08:04 PM
  • 0 Comments

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் தெரிவித்ததாவது — “ஒரு நாட்டின் ஆட்சி அதன் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் அடித்தளம் ஆகும். நல்ல ஆட்சி ஒரு நாட்டை அதன் இலக்குகளை நோக்கி முன்னேற்றுவதோடு, பொதுமக்களின் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் முக்கியக் கருவியாகும்” என அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது‘ராஷ்ட்ரிய ஏகதா திவஸ்’ நிகழ்வில் உரையாற்றிய அவர், “இன்றைய ஆட்சியில் மிகப்பெரிய சவால் என்பது பொதுமக்களின் திருப்தியைப் பேணுவதே. மக்கள் இன்று அதிகம் விழிப்புணர்வும் எதிர்பார்ப்புகளும் […]

உள்ளூர் செய்திகள்

இந்தியா–இலங்கை மின் இணைப்பு திட்டம் தொடர்பான இணைய வழி சந்திப்பு

  • Nov 1, 2025 - 06:24 AM
  • 0 Comments

இந்தியா–இலங்கை மின்சார வலையமைப்பு (Power Grid Interconnection) திட்டம் செயல்படுத்துவதற்கான நடைமுறை விவரங்களைப் பற்றி கலந்தாலோசிக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி இணைய வழி சந்திப்பு ஒன்றை நடத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகாலயம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசின் மின்சார அமைச்சின் செயலாளர் பங்கஜ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழுவும், இலங்கை ஆற்றல் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமையிலான இலங்கை குழுவும் இதில் பங்கேற்றன. இரு தரப்பினரும் மின்சார வலையமைப்பு […]

உலகம் செய்திகள்

அமெரிக்கா ரஷ்யாவின் இரு முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தடை விதித்தது

  • Oct 23, 2025 - 07:57 AM
  • 0 Comments

உக்ரைனில் உடனடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நோக்கில், அமெரிக்க நிதித்துறை (U.S. Treasury Department) ரஷ்யாவின் மிகப் பெரிய இரு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான Rosneft மற்றும்  Lukoil மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. ‘இப்போது கொலைகளை நிறுத்தி உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது,’ என அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெஸ்சென்ட் (Scott Bessent) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். பெஸ்சென்ட் கூறியதாவது: ‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தேவையானால் மேலும் நடவடிக்கைகளை எடுக்கத் தயார் […]

உள்ளூர் செய்திகள்

இன்று அதிகாலை கொழும்பில் துப்பாக்கிசூடு ஒருவர் பலி ஒருவர் காயம்

  • Sep 6, 2025 - 08:11 AM
  • 0 Comments

கொழும்பில் நேற்றிரவு (05-09) மற்றும் இன்று அதிகாலை (06-09) என இரு தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் ரிவோல்வர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டாவது சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

312 மில்லியன் ரூபா பெருமதியான போதை பொருட்களை சுங்க போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவு கைப்பற்றியுள்ளது

  • Sep 4, 2025 - 09:25 AM
  • 0 Comments

சீதுவா, கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஒரு தனியார் களஞ்சியத்திலிருந்து நேற்று (03-09) சுங்க போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் மிகப் பெரிய அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 312 மில்லியன் ரூபா ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட போதைபொருட்களில் 23,642 எக்ஸ்டசி (3,4 MDMA) மாத்திரைகள், மெத்தாம்படாமின் மாத்திரைகள், 1.445 கிலோ கிராம் கோக்கைன், 993 கிராம் ‘மாண்டி’ என அழைக்கப்படும் செயற்கை ரசாயன போதைப்பொருள் (MDMA என்றும் அறியப்படுகிறது), மற்றும் 98 […]

உள்ளூர் செய்திகள்

எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

  • Sep 1, 2025 - 11:22 AM
  • 0 Comments

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது. அதன்படி, 289 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 283 ரூபாவாகவும்,325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 313 ரூபாவாகவும், 305 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஏழு புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தனர்.

  • Aug 23, 2025 - 08:07 AM
  • 0 Comments

இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மேம்படுத்துவது ஒவ்வொரு தூதுவரின் பிரதான பொறுப்பாகும் என்று வலியுறுத்தினார். புதிதாக நியமிக்கப்பட்ட தூதர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அவர், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு எந்தவித பாகுபாடும் இன்றி சமமாகச் சேவைகளை வழங்க வேண்டும் என்றும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மை நோக்கி நகர்ந்து வருவதாகவும், நாட்டின் தற்போதைய தேவைகள் மற்றும் சவால்களை நன்கு […]

இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

த.வெ.க.வின் இரண்டாவது மாநாட்டிற்கு வந்த தொண்டர்களால் மதுரையே அதிர்ந்தது

  • Aug 21, 2025 - 06:40 PM
  • 0 Comments

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநாடு இன்று மாலை மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தியில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர் என எதிர்பார்க்கப்படுவதால்இ கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியும் இத்தகைய பரந்த பரப்பளவிலான மைதானத்தில் மாநாடு நடத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ள திடலில்இ 250 ஏக்கர் மாநாட்டிற்காக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பு ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து நெரிசல்

  • Aug 15, 2025 - 06:48 PM
  • 0 Comments

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்தும், கொழும்பு பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை பொது மயானத்திலிருந்து பொரளை சந்தி நோக்கி செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

சட்டவிரோத படுகொலைகள் இலங்கையில் தொடர்கின்றன – மனித உரிமை ஆணைக்குழு கவலை

  • Aug 13, 2025 - 10:53 AM
  • 0 Comments

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவர அறிக்கையில், கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அறிக்கையில், பொலிஸாரின் காவலில் இருந்தபோது பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றபோது பல்வேறு கொலைச்சம்பவங்கள் நடந்ததாகவும், இந்நேரங்களில் சந்தேகநபர்கள் தங்களை தாக்கினர் அல்லது தப்பிக்க முயன்றனர் என்றே பொலிஸார் விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp