e0aea4e0aeaee0aebfe0aeb4e0af8d e0aea4e0af87e0ae9ae0aebfe0aeafe0ae95e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0ae95e0aeb3e0af8d e0ae92 | Pathivu News செய்திகள்

தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்- வி.எஸ்.சிவகரன்.

  • Nov 16, 2024 - 10:18 AM
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று சனிக்கிழமை (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கிறது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஆடசியாளர்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பை தொடர்ச்சியாக மென் வலுவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். சிங்கள பேரினவாதம் அவ்வாறு செயற்படுகின்ற Nபுhது தமிழர் தரப்பு பிரிந்து நின்று அதனை […]

e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae9ae0ae95e0af8de0aea4e0aebf 123 e0ae86e0ae9ae0aea9e0ae99e0af8d | Pathivu News செய்திகள்

தேசிய மக்கள் சக்தி 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

  • Nov 15, 2024 - 01:18 PM
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை அதிகாரத்தை கைபப்பற்றியுள்ளது இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தற்போது 68 இலட்சத்து 42 ஆயிரத்து 223 வாக்குகளுடன் 123 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி எதிர்கட்சி ஆகின்னறது.31 ஆசனங்களை அது கைப்பற்றியுள்ளது தமிழரசுக் கட்சி 06 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது

e0ae8ae0ae9fe0ae95e0aeb5e0aebfe0aeafe0aeb2e0aebee0aeb3e0aeb0e0af8de0ae95e0aeb3e0af88 e0aeaae0ae9fe0af81e0ae95e0af8ae0aeb2e0af88 e0ae9a | Pathivu News செய்திகள்

ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்- ஜனாதிபதி

  • Nov 10, 2024 - 02:11 PM
  • 0 Comments

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலை வழக்குகள் துர்சி தட்டி எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ் ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட ஆகியோரை கொலை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் அவர் தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் தேர்தல் பிரச்சார பேரணில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மேலும் என தெரிவித்துள்ளார்.

e0ae95e0aea9e0af87e0ae9fe0aebfe0aeaf e0ae87e0aea8e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0aeaee0af8d e0ae85e0aea9e0af88e0aeb5 | Pathivu News உலகம் செய்திகள்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

  • Nov 9, 2024 - 02:59 PM
  • 0 Comments

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து முரண்பாடு ஆரம்பமானது அணிமையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கனடா அறிவித்ததையடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் […]

e0ae9ae0af86e0aeafe0aeb1e0af8de0ae95e0af88 e0aea8e0af81e0aea3e0af8de0aea3e0aeb1e0aebfe0aeb5e0af88 e0aeaae0aeafe0aea9e0af8de0aeaae0ae9f | Pathivu News செய்திகள்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பில் பிரதமர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

  • Nov 8, 2024 - 12:59 PM
  • 0 Comments

தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்களை தொழில்நுட்பத்தில் மேம்படுத்துவது தொடர்பில் நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய கலந்துரையாடியுள்ளார். நாட்டின் அபிவிருத்தியில் தகவல் தொழில்நுட்பத்தின் வகிபங்கு தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. அரசாங்கத்தின் டிஜிட்டல் மயப்படுத்தல் முயற்சிகள் மற்றும் அரச சேவையை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்கும் போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராயபட்டது.  

e0aeafe0af81e0aea4e0af8de0aea4e0aea4e0af8de0aea4e0aebee0aeb2e0af8d e0ae89e0aeafe0aebfe0aeb0e0aebfe0aeb4e0aea8e0af8de0aea4 e0aeaee0ae95 | Pathivu News செய்திகள்

யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு நினைவுத்தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்.

  • Nov 4, 2024 - 12:38 PM
  • 0 Comments

கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை மற்றும் சம உரிமையின்மை ஆகிய காரணிகளால் யுத்தம் தோற்றம் பெற்று பலரையும் காவு கொண்டது இந்த யுத்தத்தால் தமிழ் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் யுத்தம் மௌனித்து 15 […]

e0ae85e0aeb0e0ae9ae0af81 e0ae89e0ae9fe0aea9e0af8d e0aea4e0af87e0ae9ae0aebfe0aeaf e0aeaae0aebee0aea4e0af81e0ae95e0aebee0aeaae0af8d | Pathivu News செய்திகள்

அரசு உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்கவேண்டும் – சாகல ரத்நாயக்க.

  • Oct 24, 2024 - 04:17 PM
  • 0 Comments

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக அரசு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமனம் செய்ய வேண்டுமென ரணிலின் ஆலோசகர் சகால ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வரும் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ரணில் அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் புலனாய்வு தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கான பொறிமுறையை உருவாக்கியிருப்பதால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடிகின்றது என தெரிவித்துள்ளார். நாட்டின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அந்நிய செலாவணி பிரச்சினையை உருவாக்கும் […]

e0ae85e0aeb0e0aebfe0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aeb5e0aebfe0aeb2e0af88e0aeafe0af88 e0ae95e0ae9fe0af8de0ae9fe0af81e0aeaae0af8d | Pathivu News செய்திகள்

அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் ஜனாதிபதி அநுர

  • Oct 22, 2024 - 09:33 PM
  • 0 Comments

அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடினாhர் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகள் அதிக நன்மைகளைப் பெறும் அடிப்படையில் நீண்டகால திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் மக்களின் பிரதான உணவாக பயன்படுத்தப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்துள்ளதால் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல என அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் அரிசியை […]

e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeafe0ae95e0af8d e0ae95e0ae9fe0aeb1e0af8de0aeaae0ae9fe0af88 e0ae95e0aeaae0af8de0aeaae0aeb2e0af8d | Pathivu News செய்திகள்

இந்தியக் கடற்படை கப்பல் இலங்கையை வந்தடைந்தது.

  • Oct 19, 2024 - 03:20 PM
  • 0 Comments

இந்தியக் கடற்படை சொந்தமான கப்பல் இன்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்த கப்பலின் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இலட்சத்தீவுகளில் ஒன்றான கல்பேனி தீவின் பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலானது கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தேடல் மற்றும் […]

e0aeaee0af87 e0ae87 e0aea4e0af80e0aeb5e0af81e0ae95e0aeb3e0af88 e0aeb5e0af80e0aeb4e0af8de0aea4e0af8de0aea4e0aebf e0ae9fe0aebf20 e0aea4 | Pathivu News செய்திகள் விளையாட்டு

மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை!

  • Oct 18, 2024 - 04:25 AM
  • 0 Comments

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் Rovman Powell 37 ஓட்டங்களையும், Gudakesh Motie 32 […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp