உள்ளூர் செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான யாழ் இளைஞன் விளக்கமறியலில்

  • Dec 2, 2024 - 04:05 AM
  • 0 Comments

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் […]

விளையாட்டு

சாருஜன் சண்முகநாதன் மீண்டும் அசத்தல்!

  • Dec 1, 2024 - 07:08 PM
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டி இன்று சாஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகப்பட்சமாக சாருஜன் சண்முகநாதன் 102 ஒட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் கஸன்பார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் […]

செய்திகள்

கடற்றொழில் அமைச்சரும்; இந்திய உயர்ஸ்தானிகரும் சந்திப்பு

  • Dec 1, 2024 - 10:49 AM
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் இலங்கை, இந்திய மீனவர்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை அமையவுள்ளதாக கடற்தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் […]

உள்ளூர்

அந்தர் பெல்டி அடித்த செல்வம் அடைக்கலநாதன்

  • Nov 30, 2024 - 10:47 AM
  • 0 Comments

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதி வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அநுரகுமார பற்றி தேர்தலில் பலி சுமத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள்

சொந்த காசில் சூனியம் வைத்த அதிபருக்கு விளக்கமறியல்

  • Nov 29, 2024 - 11:05 AM
  • 0 Comments

உழவு இயந்திரம் மாணவர்களை ஏற்றிவிட்ட குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மதரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது ஏனைய 2 பேரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது அம்பாறை – காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரஸா அதிபர், ஆசிரியர் […]

உள்ளூர்

தண்ணியில் தடுமாறும் யாழ்ப்பாணம்

  • Nov 29, 2024 - 10:41 AM
  • 0 Comments

யாழ் மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று அவசர சந்திப்பு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் ; கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத் துய்யகொந்த ‘ அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மருந்துகள் இடையூறு இன்றி சீராக விநியோகிக்க திறைசேரி விசேட ஒதுக்கீடுகளை காலதாமதமின்றி ஒதுக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் இயற்கை […]

செய்திகள்

மாவீரர்களையும் தலைவரையும் போற்றுபவர்கள் முட்டாள்கள் என்கிறார் அலி சப்ரி.

  • Nov 28, 2024 - 10:52 PM
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது என் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தெரிவித்துள்ளார் மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். இந்நிலையில், தமிழ் மக்கள் மாவீரர்களை நினைவுகூற அனுமதித்தது தவறு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளாhர் பயங்கரவாதத்தைக் […]

உள்ளூர்

நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதி வெள்ளக்காடாகியது

  • Nov 27, 2024 - 04:08 PM
  • 0 Comments

சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகமும் அதனையண்டிய வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் நீர் உட்புகுந்து அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  

உள்ளூர்

கிளிநொச்சியில் சீரற்ற வானிலை தொடர்கின்றது

  • Nov 27, 2024 - 03:32 PM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி வட்டக்கச்சி பெரியகுளம் பகுதிகளில் வீதிகளை மூடியவாறு வெள்ள நீர் தேங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களுக்கு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.  

உள்ளூர்

மழை வெள்ளம் ஏ9 வீதியை முடக்கியது

  • Nov 27, 2024 - 03:04 PM
  • 0 Comments

சீரற்ற வானிலையால் வவுனியா ஏ9 வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுகின்றது. கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp