இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் : அரசியலமைப்பு விவகாரமே உள்வாங்கப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஒன்றை பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன. இதில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், மேலும் 13ஆவது திருத்தத்தின்படி மாகாணசபைத் தேர்தல்களை காலந்தாழ்த்தாமல் விரைந்து நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்பே அளித்த வாக்குறுதிகளுக்கிணங்க, அரசியலமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் […]









