முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜா சமாதானத்தை எப்போதும் விரும்பியதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

  • Feb 2, 2025 - 07:07 AM
  • 0 Comments

எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் சமாதானத்துக்கான கரங்கள் நீட்டப்பட்ட போதெல்லாம் மாவை சேனாதிராஜா சமாதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸ தெரிவித்துள்ளார். மாவை. சேனாதிராஜாவின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான உறுப்பு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மரண செய்தி அதிர்ச்சியளித்தது எமக்கு எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் […]

முக்கிய செய்திகள்

மஹிந்தவை வீட்டிலிருந்து வெளியேற்ற புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் 

  • Feb 1, 2025 - 07:28 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு எழுத்து மூலம் இது வரை அநுர அரசு அறிவிக்கவில்லை. எனவே அவரை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற்றுவதற்காக புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு சுனில் வட்டகல வேண்டுகோள் விடுத்துள்ளார்     […]

முக்கிய செய்திகள்

நிராயுதபாணியானார் மகிந்தவின் 2வது புத்தா யோசித்த

  • Feb 1, 2025 - 07:14 PM
  • 0 Comments

அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி யோசித ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த 7 துப்பாக்கிகளில் 5 துப்பாக்கிகளை ஆரம்ப கட்டத்தில் ஒப்படைத்திருந்தார் இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

ஊழல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதியென்கிறார் அமைச்சர் வசந்த சமரசிங்க

  • Jan 31, 2025 - 06:15 AM
  • 0 Comments

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஊழல்வாதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் முன் நிறுத்தப்படுவார்கள் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று (30-01-2025 ) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மகிந்தவை பாதுகாக்க வேண்டும்- எஸ்.பி.திசாநாயக்க

  • Jan 31, 2025 - 06:04 AM
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டாலும் அதன் நோக்கம் இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. காலி முகத்திடல் அரகலய பூமியில் புலிகளின் இலக்கு வெளிப்பட்டது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (30-01-2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சந்தையில் நிலவும் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் வெகுவிரைவில் தீர்வு […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் விபத்து குடும்பஸ்தர் உயிரிழந்தார்

  • Jan 30, 2025 - 06:31 PM
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தினையடுத்து உழவி இயந்திரத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

தண்ணியில் தண்ணீரில் மீண்டும் மீண்டும் பாய்ந்தவர் காணாமல் போனார் – கிளிநொச்சியில் சம்பவம்

  • Jan 29, 2025 - 06:33 PM
  • 0 Comments

மதுபோதையில் ளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ நிகழ்வின்போதே இந்த நபர் காணாமல்போயுள்ளார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார். மது போதையில் அப்பகுதிக்குச் சென்ற இந்த நபர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி கரைக்கு கொண்டுசென்றதன் பின்னர், மீண்டும் அவர் குளத்தில் […]

முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு அரசியல், சமூக செயற்பாட்டாளரான பீற்றர் இளஞ்செழியனை பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு

  • Jan 29, 2025 - 06:07 PM
  • 0 Comments

முல்லைத்தீவில் வசித்துவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான பீற்றர் இளஞ்செழியனை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (29) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு – மணல் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பீற்றர் இளஞ்செழியனை எதிர்வரும் 01.02.2025 அன்று அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக 01.02.2025ஆம் திகதி […]

முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவை எழிற்சியூட்டுகிறார்

  • Jan 29, 2025 - 09:19 AM
  • 0 Comments

கடந்த கால கசப்புக்களை மறந்து மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் (சிலிண்டர்) உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (27) கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் […]

இந்தியா

18 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டு வன்புணர்ச்சிக்குட்படுத்தினால் இனி தமிழகத்தில் மரண தண்டனை

  • Jan 29, 2025 - 07:51 AM
  • 0 Comments

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை அடுத்து இன்று அரசிதழில் வெளியானது கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சட்டதிருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:- பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp