புதியவை முக்கிய செய்திகள்

வவுனியாவில் ஓட்டோவின் அலங்கார பாகங்களுக்கு தண்டப்பணம் விதித்த பொலிசார் கோவமடைந்த சாரதி செய்த செயல்

  • Feb 8, 2025 - 06:48 AM
  • 0 Comments

வவுனியாவில் க்ளீன் சிறிலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி தனது வாகனத்தின் மேலதிக பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று (07-02-2025) இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேரூந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் தெரித்துள்ளதுடன், அவற்றினை அகற்றுவதற்கு கால அவகாசமும் வழங்கியிருந்தனர். அந்தவகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் கிளீன் […]

சினிமா

ரஜினிக்க ஜோடியாக கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றாரா?

  • Feb 7, 2025 - 07:20 AM
  • 0 Comments

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘கூலி.’ சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிகிடு வைப் என்ற […]

முக்கிய செய்திகள்

பிள்ளையான் மீதான ஆசாத் மௌலானாவின் குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது – கோட்டாபய

  • Feb 6, 2025 - 06:50 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். டெய்லிமிரர் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதிலளித்துள்ள கோட்டபய ராஜபக்ச சிஐடி அதிகாரிகள் சமர்ப்பித்த ஆதாரங்கள் உட்பட பல விடயங்களை உள்ளடக்கியுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை தயவுசெய்து வாசியுங்கள் என பதிலளித்துள்ளார். அந்த அறிக்கையில் இருக்கும் விடயங்களை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது […]

செய்திகள்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு 14 ஏக்கர் காணியும சொந்தம் என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஜீ.ஏக்கு கடிதம்

  • Feb 6, 2025 - 06:05 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும், அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. குறித்த கடித்ததில், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். குறித்த கூட்டத்திற்கு, […]

முக்கிய செய்திகள்

அமெரிக்க வீசா தொர்பில் அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது

  • Feb 6, 2025 - 06:30 AM
  • 0 Comments

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல், வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் ஏகுளு கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது. தாமதங்களைத் […]

அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளனர்

  • Feb 5, 2025 - 08:34 PM
  • 0 Comments

அடக்குமுறைகளை கைவிட்டு அரசாங்கம் ஜனநாயக முறையில் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அரசாங்கம் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும்போது அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது. கம்பஹாவில் அது இடம்பெற்றுள்ளது. அதேபோன்று கம்புறுப்பிட்டியவில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது அங்கும் அடக்குமுறை இடம்பெற்றுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் சர்வதேச நாணய […]

முக்கிய செய்திகள்

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பிரகடனம் வாசிக்கப்பட்டது

  • Feb 4, 2025 - 05:09 PM
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக அனுஷ்டித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று  பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, பிரகடனமும் வாசிக்கப்பட்டது. அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழர் எமக்கு சுதந்திர நாள்! ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகிறோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் […]

முக்கிய செய்திகள்

பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகளுக்கு மாறாக, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும்- வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாஸ

  • Feb 4, 2025 - 07:32 AM
  • 0 Comments

பழைய பிரச்சினைகளுக்கு பழைய தீர்வுகளையன்றி, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்துக்குப் பின்னர் நாம் உரிமையாகப் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 77ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், சுதந்திரம் மற்றும் அதன் பின்னர் நமது தாய்நாடு கடந்துவந்த காலகட்டத்தை மீண்டும் நினைவுகூருவது அவசியமாகிறது. சுதந்திரம் பெற்ற தருணத்தில், நாம் ஒரு நாடாக வறுமை, நோய்கள் […]

முக்கிய செய்திகள்

சிறைசாலை கைதிகளை உறவினர்கள் பார்ப்பதற்கு விசேட அனுமதி – சிறைச்சாலை ஆணையாளர்

  • Feb 3, 2025 - 05:58 AM
  • 0 Comments

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை காண உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளை ; 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட உள்ளது. அதற்கமைய உரிய பாதுகாப்புகளுடன் திறந்த முறையில் சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாகவே கைதிகளை காண அனுமதி […]

முக்கிய செய்திகள்

நீதித்துறை வாழ்க்கை நிறைவுறாது முடிவுறுகிறது : மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆதங்கம்

  • Feb 2, 2025 - 05:57 PM
  • 0 Comments

வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று சனிக்கிழமை (01-02-2025 ) ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் நீதவானாக 9 ஆண்டுகள், வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 3 ஆண்டுகள் கடமை புரிந்துள்ளேன். திருகோணமலையில் 2008- 2010 இல் மேல் நீதிமன்ற […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp