உள்ளூர் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்

  • Jul 19, 2025 - 02:13 PM
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய், காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதவது நீதி வழங்கு, அனைத்து தேசிய இனத்தவருக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காக போராடுவோம் போன்றவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடு 4 முதல் 5 வயது சிறுமியினுடையது என சந்தேகம்

  • Jul 16, 2025 - 07:00 AM
  • 0 Comments

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வு வழக்கு நேற்று (15-07) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தினார். அகழ்வுப் பணியின் இரண்டாம் கட்டம் தொடர்பான தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையும், சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் நீதிமன்றத்திற்கு […]

செய்திகள் முக்கிய செய்திகள்

அரசு வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை – சிகிச்சை சேவைகள் கடுமையாக பாதிப்பு

  • Jul 15, 2025 - 08:48 PM
  • 0 Comments

அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தீவிர பற்றாக்குறை நிலவி வருவதால், நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, மருந்துப் பற்றாக்குறைக்கு மாற்றுத் தீர்வாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியிடங்களில் மருந்து கொள்வனவுக்கான முறைகள் குறித்து சுகாதார அமைச்சு தெளிவான வழிகாட்டல்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். வைத்தியர்கள் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சிகிச்சை சேவைகளை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் பேசுவதற்கு இலங்கை குழு 18 ம் திகதி பயணமாகின்றது

  • Jul 15, 2025 - 08:35 PM
  • 0 Comments

இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 30 வீத பரஸ்பர கட்டணத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட, உயர்மட்ட இலங்கை அரசுக்குழுவொன்று ஜூலை 18ஆம் திகதி அமெரிக்கா செல்லும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் இருந்து ஜூலை 9ஆம் திகதி வெளியான அறிவிப்புக்குப் பின்னர், ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய கட்டணத்திற்கு முன்பான நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட 44 வீத கட்டணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஜூலை 12ஆம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை ‘ஏற்றுக்கொள்ள முடியாதென்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

  • Jul 15, 2025 - 08:26 PM
  • 0 Comments

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், தபால் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மத்தியரவு (15) முதல் அனைத்து அதிபடி வேலைகளிலிருந்தும் விலகும் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் பின்னர் திட்டமிட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு வராததை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கோரவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்கம் கூறியுள்ளது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, […]

உள்ளூர் செய்திகள்

யாழ் மாவட்டத்தில் மட்டும் 30 வீத நிலப்பரப்புகளை அரசு அபகரித்துள்ளதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

  • Jul 15, 2025 - 03:34 PM
  • 0 Comments

போர் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளாகியும், தமிழ்மக்கள் தங்களின் சொந்த நிலங்களுக்கு திரும்ப முடியாததற்கு தற்போதைய அரசு மற்றும் கடந்த அரசுகள் பொறுப்பாளிகள் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்ப்பாணம் வலிகாமத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவிக்கக் கோரி, ஜனாதிபதி செயலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ‘அதிஉயர் பாதுகாப்பு வலயம்’ என்ற பெயரில் சட்டரீதியான ஏற்பாடுகள் இல்லாமலேயே […]

உள்ளூர் செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் வேலைநிறுத்தம்

  • Jul 15, 2025 - 08:11 AM
  • 0 Comments

இன்று (ஜூலை 15) நள்ளிரவு முதல், இலங்கை தபால் சேவைகளின் அலுவலகங்களிலும் நிர்வாகத் துறைகளிலும் ஊழியர்கள் அதிக நேர வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளனர் என தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம், பணியில் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படுகிறது என, அந்த கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். தொழிற்சங்கத் தரப்பினரின் இந்த நடவடிக்கையால், நாளைய தினங்களில் அறிவிப்பு இல்லாத தாமதங்கள் மற்றும் சேவை இடையூறுகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசின் அசமந்த போக்காலேயே அமெரிக்க தீர்வை வரியை மேலும் குறைக்க முடியாமற்போனது – திஸ்ஸ அத்தநாயக்க

  • Jul 15, 2025 - 06:36 AM
  • 0 Comments

அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் சரியான முறையில் செயற்பட்டிருந்தால், அமெரிக்காவின் தீர்வை வரியை இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்கு குறைத்துக்கொள்ள முடிந்திருக்கும். அதேநேரம் தற்போது 30 சதவீதத்துக்கு குறைத்துக்கொண்டிருப்பதன் மூலம் மகிழச்சியடைய முடியுமா என்பதை எமக்கு போட்டியாக இருக்கும் நாடுகளுடன் சந்தை நிலவரத்தின் பிரகாரமே தீர்மானிக்க முடியுமென ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று (14-07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். […]

உள்ளூர் செய்திகள்

இந்தியா மீதான அமெரிக்க வரியால் இலங்கைக்கும் பாதிப்பென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது

  • Jul 13, 2025 - 07:33 AM
  • 0 Comments

இந்தியாவுக்கு எந்தளவு வரி அறிவிக்கப்படவுள்ளது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (11-07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசியாவில் இலங்கை மாத்திரமே அமெரிக்காவுடன் தீர்வை வரி தொடர்பில் […]

உள்ளூர் செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணையில் வெளிப்படத்தன்மை இருக்குமென்கிறார் பிரதமர் ஹரணி

  • Jul 11, 2025 - 09:45 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம். இதில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு எதுவும் இல்லையென பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். சமிந்த விஜேசிறி தனது கேள்வியில், இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp