செய்திகள்

கணவனை காப்பாற்ற சென்ற மனைவியும் உயிரிழப்பு!

  • Nov 29, 2024 - 11:55 AM
  • 0 Comments

புத்தளம் மாவட்டத்தில் முந்தல் 412 ஏக்கர் பகுதியில் நேற்று (28) மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 52 வயதுடைய தம்பதிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், தம்பதியர் வசித்துவந்த வீட்டுக்கு அருகில் சிறிய வியாபார நிலையம் நடத்தி வந்துள்ளனர். வியாபார நிலையத்தில் மின்சார இணைப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதை கணவர் சீர் செய்ய முயன்ற போது அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில், கணவரை காப்பாற்ற […]

உள்ளூர் செய்திகள்

மின்சார சபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம்

  • Nov 23, 2024 - 12:48 AM
  • 0 Comments

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணிநேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின் துண்டிக்கப்படுவதாக பிரதேசவாழ் மக்கள் கவலை வெளியிட்டள்ளனர் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உட்பட கிராம மக்கள் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தெரிவித்தனர். மின்சார சபையின் இச்செயற்பாட்டினால் […]

செய்திகள்

டக்ளஸ் முன்னனர் இருந்த அமைச்சு இராமலிங்கம் சந்திரசேகர் வசமானது

  • Nov 18, 2024 - 11:18 AM
  • 0 Comments

கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை பதவிப்பிரமாணம் நடைபெற்றது.

உள்ளூர் செய்திகள்

ஜேவிபி அரசாங்கம் பாராளுமன்றத்திலே அதிக ஆசனங்களை பெறாது- செல்வம் அடைக்கலநாதன்.

  • Nov 12, 2024 - 01:56 AM
  • 0 Comments

நேற்று திங்கட்கிழமை செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் அவர் தற்போது தெரிவித்துவரும் கருத்து தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் அரசியல் நாடகம் என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பல கூட்டங்களில் தமிழ் தலைவர்கள் தன்னோடு எந்த விடயத்திலும் கலந்துரையாடுவதில்லை அதனால் தற்போது பஸ் சென்று விட்டது இனி யாருடைய தயவும் தேவையில்லை அந்த பஸ் ஓடும் என்று […]

உலகம் செய்திகள்

கனேடிய இந்துக்களும் அனைவரும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்

  • Nov 9, 2024 - 02:59 PM
  • 0 Comments

இந்தியா-கனடா இடையேயான உறவில் தொடர்ந்தும் விரிசல் பெரிதாகின்றது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சுமத்தியதிலிருந்து முரண்பாடு ஆரம்பமானது அணிமையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கனடா அறிவித்ததையடுத்து இரு நாட்டு உறவிலும் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் ஒட்டாவாவில் இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் […]

செய்திகள்

டிரம்பை கொல்ல செய்ய திட்டமிட்டவரே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார் – அமெரிக்கா.

  • Nov 9, 2024 - 02:35 PM
  • 0 Comments

  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக போட்டியிட்ட போது அவரை கொலை செய்ய திட்டமிட்டவரிடமே இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயன்றார் என ஆப்கானை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. குறித்த நபரிடம் இலங்கையில் யூதர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த […]

செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

  • Nov 4, 2024 - 12:53 PM
  • 0 Comments

  நாடாளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவைத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் திகதியானது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்; விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. தேர்தல் சட்டத்தின் […]

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் ஜாதகம் பார்ப்பதாக வந்த பெண்ணின் திருவிளையாடல்.

  • Oct 28, 2024 - 02:13 AM
  • 0 Comments

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த […]

உலகம்

ரொறன்ரோவில் தீ விபத்து குழந்தை பலி.

  • Oct 26, 2024 - 01:33 PM
  • 0 Comments

  கனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் சிசுவொன்று கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் எக்லின்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் இ சிசுவொன்று உயிரிழந்த அதே வேளை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்படும் போது ஆறு பேர் வீடடில் இருந்தனர் எனவும், தீ விபத்து காரணமாக சிலர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகள்

அரரவானி நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

  • Oct 26, 2024 - 11:59 AM
  • 0 Comments

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் முதல் திருநங்கை என வரலாறு படைத்துள்ளார். பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நிமேஷா நன்றி தெரிவித்துள்ளார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp