உள்ளூர் செய்திகள்

கொழும்பில் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தவர் தானியங்கி துப்பாக்கியுடன் கைது

  • Aug 16, 2025 - 08:45 AM
  • 0 Comments

கொழும்பில் பாதாள உலக தாக்குதலை மேற்கொள்ளவிருந்த சந்தேக நபர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகிக்கப்படும் நபர் ஓய்வுபெற்ற இராணுவ கமாண்டோ படை சார்ஜென்ட் மேஜர் ஒருவர் ஆவார். அவரிடம் செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருட்கள் இருந்தன. சந்தேக நபர் மாலபேயில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். கைதான நபரிடமிருந்து பல இராணுவ கமாண்டோ உடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், டுபாயில் உள்ள இராணுவ கமாண்டோ படையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பொது எதிரணியை உருவாக்க மொட்டு கட்சி அழைப்பு

  • Aug 14, 2025 - 03:13 PM
  • 0 Comments

தாய்நாட்டை பாதுகாக்க எதிரணிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சி உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க இதுகுறித்து கூறியதாவது: ‘நாட்டு மக்களுக்கு தலைமைத்துவம் அவசியம். எனவே, முதலில் நாம் ஒன்றிணைந்து கூட்டு எதிரணியாக செயல்படுவோம். அதன் பின்னர் பயணத்தை தீர்மானிக்கலாம். அரசாங்கம் ஆட்சியில் ஒரு வருடமாக இருக்கிறது. ஆனால் பிரச்சினை ஏற்பட்டால், மக்கள் பிரதிநிதி கடிதம் […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் – பொலிஸார் குவிப்பு

  • Aug 14, 2025 - 02:59 PM
  • 0 Comments

இன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக பெரும் போராட்டம் ஒன்று நடந்தது. சம்பவத்தின் போது அந்த பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியதால், பொலிஸார் குவிந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதையும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதையும் எதிர்த்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, முத்துநகர் பகுதியில் உள்ள 600 ஏக்கர் வயல் நிலத்தை இந்திய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வன நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த […]

உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்

  • Aug 14, 2025 - 02:46 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க், இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான அரசாங்கத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்த பொறுப்பை நீண்டகாலமாக ஏற்க மறுத்துள்ளதை கண்டித்து, ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தியுள்ளார். அதன் மூலம், இராணுவத்தினால் பிடிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை விடுவித்தல், பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல், காணாமல் போனவர்கள் […]

உள்ளூர் செய்திகள்

சட்டவிரோத படுகொலைகள் இலங்கையில் தொடர்கின்றன – மனித உரிமை ஆணைக்குழு கவலை

  • Aug 13, 2025 - 10:53 AM
  • 0 Comments

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனித உரிமை நிலவர அறிக்கையில், கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அறிக்கையில், பொலிஸாரின் காவலில் இருந்தபோது பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றபோது பல்வேறு கொலைச்சம்பவங்கள் நடந்ததாகவும், இந்நேரங்களில் சந்தேகநபர்கள் தங்களை தாக்கினர் அல்லது தப்பிக்க முயன்றனர் என்றே பொலிஸார் விளக்கம் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையில் கஞ்சா உற்பத்திக்கு அனுமதி

  • Aug 12, 2025 - 04:20 PM
  • 0 Comments

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு முதலீட்டு சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் தம்மிக்க அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். அவரின் விளக்கத்தில், முதலீட்டு சபையின் திட்டத்தின் படி இந்த அனுமதி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 37 பேர் விண்ணப்பித்த நிலையில், ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. […]

உள்ளூர் செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமனம்!

  • Aug 12, 2025 - 03:56 PM
  • 0 Comments

நாட்டின் 37ஆம் பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி அங்கீகாரம் வழங்கியது. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் 6 பேரூம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

  • Aug 12, 2025 - 03:32 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் உரிமைகளை ரத்து செய்யும் அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரேணுகா பெரேரா தாக்கல் செய்துள்ளார். இதில், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். மனுதாரர் தனது மனுவில், கடந்த 7ஆம் திகதி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைத்ததாகவும், அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டரீதியாக ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்மொழியப்பட்ட […]

உள்ளூர் செய்திகள்

யாழ் கொடிகாமத்தில் ஏ9 வீதியில் டிப்பர், லொரி, கார்…. விபத்து ஒருவர் பலி, பலர் காயம்

  • Aug 11, 2025 - 12:22 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம்–கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (10-08) இடம்பெற்ற பல வாகன மோதல் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியது. உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் வந்த […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் முதலாவது பணக்காரனாக இஸாரா நாணயக்கார முதலிடத்தைப் பிடித்துள்ளார்

  • Aug 10, 2025 - 04:31 PM
  • 0 Comments

கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் இஸாரா நாணயக்கார இலங்கையின் முதல்நிலை செல்வந்தராகத் திகழ்கிறார். இதன் மூலம், அவர் தம்மிக்க பெரேராவை முந்தி நாட்டின் பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். கல்ஃப் நியூஸ் வெளியிட்ட தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலில், இந்திய தொழிலதிபர் முகேஸ் அம்பானி 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் மிகப்பெரிய செல்வந்தராக இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தானின் ஸாஹித் கான் 13.5 பில்லியன், […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp