உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பாண் விற்பனையாளர் ஹெரோயினுடன் கைது

  • Nov 1, 2025 - 07:18 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனை செய்து வந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாண பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் கைதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

  • Oct 30, 2025 - 08:34 AM
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 2026 ஜனவரி 28 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. நேற்று (29-11) நடைபெற்ற விசாரணையில், கோட்டை நீதவான் இஸுரு நெத்திக்குமாரா குற்றப்புலனாய்வு துறைக்கு (ஊஐனு) விசாரணையை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் பணித்தார். மேலும், கடந்த விசாரணை நாளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே நடந்த சம்பவங்கள் […]

உள்ளூர் செய்திகள்

சீனா இலங்கையுடன் இணைந்து வலுவான வளர்ச்சி பயணத்திற்கு தயாராகவுள்ளது- இலங்கைக்கான சீன தூதர்

  • Oct 30, 2025 - 08:25 AM
  • 0 Comments

‘சீனா இலங்கையுடன் இணைந்து வலுவான வளர்ச்சி பயணத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளது,’ என்று இலங்கைக்கான சீன தூதர் கி ஜென்ஹோங் தெரிவித்தார். அவர் கொழும்பில் நடைபெற்ற ‘சீனாவும் உலகமும் – வளமான எதிர்காலத்துக்கான சீனா–இலங்கை உரையாடல்’ என்ற நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு கூறினார். அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், ‘அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான சீனாவின் வளர்ச்சி திட்டம் இலங்கைக்கும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைத் திறக்கவுள்ளது. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக சீனா நெருக்கமாக இணைந்து செயல்பட […]

உள்ளூர் செய்திகள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் மறைந்துள்ளாரா?

  • Oct 26, 2025 - 07:12 PM
  • 0 Comments

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர (மிதிகம லசா) படுகொலைக்கு தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பொலிஸாருடனான மோதலின் போது தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக எனும் இவர் மீது தேடுதல் வேட்டை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் வலது மேல் கையில் “Anuradha” என்றும் இடது கையில் “Hitumade Jeevithe” […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

CEB-க்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் – நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்

  • Sep 19, 2025 - 08:47 AM
  • 0 Comments

இலங்கை மின்விநியோக சபை தற்போது மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதால், மேலும் சில மாதங்கள் அது இயங்க வேண்டியிருக்கும் நிலையில், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலா தற்போது வகித்து வரும் இடைக்காலத் தலைவருக்கு பதிலாக நிரந்தரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மின்சார நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ECA பொதுச் செயலாளர் சஞ்ஜீவ தம்மிகா, ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது: ‘ஊநுடீ ஏற்கனவே நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், மறுசீரமைப்பு முழுமை பெறும் வரை அது மேலும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அம்பாறையில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றி வளைப்பு உற்பத்தியாளர் தப்பியோட்டம்

  • Sep 18, 2025 - 05:35 PM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு, கடந்த செவ்வாய்க்கிழமை (16-09) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டன. இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, கசிப்பு உற்பத்தி நிலையங்கள் கண்டறியப்பட்டன. ஆனால், இந்நிலையங்களை நடத்தி வந்திருந்த சந்தேக நபர் தப்பியோடியதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் […]

உள்ளூர் செய்திகள்

என்.பி.பி. அரசின் 6 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஊழல் ஊடாக சொத்து சேகரிப்பு?

  • Sep 18, 2025 - 07:03 AM
  • 0 Comments

இலங்கை தேசிய மக்கள் சக்தி அரசின் ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல் மற்றும் வீணாக்கத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி என்ற சமூக அமைப்பின் தலைவர் கமந்த துஷாரா, இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். அவர், 2006ஆம் ஆண்டின் பணமோசடி தடுப்பு சட்ட எண் 5ன் கீழ் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளார். முறைப்பாடு செய்யப்படடுள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள்: சுகாதாரம், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ்தேசிய கட்சிகளும் சிங்கள கட்சிகளும் சுவிஸ்லாந்தில் பேச்சுவார்த்தை

  • Sep 17, 2025 - 09:21 AM
  • 0 Comments

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தப்பட்டது. இதே கலந்துரையாடல் இன்று புதன்கிழமை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 19 உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்றனர். இதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள், ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் அடங்கினர். சுவிஸ்லாந்தில் நடைபெறும் கலந்துரையாடல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

CEB யூனியன் இன்று மற்றும் நாளையும் போராட்டம்

  • Sep 17, 2025 - 08:00 AM
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம், அரசு CEB ஐ நான்கு தனி நிறுவனங்களாக பிரிக்க முடிவெடுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. கடந்த திங்கள் (15) முதல் ஆரம்பிக்கப்பட்ட முதல் கட்டம் முடிந்தது, இப்போது இரண்டாம் கட்டம் இன்று (17) மற்றும் நாளை (18) நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாட்களில் தொழில்சங்க உறுப்பினர்கள் வேலை செய்யாமல், குறிப்பாக சில உத்தியோகப்பூர்வ சந்திப்புகள் மற்றும் கேள்வி அறிவித்தல் தொடர்பான வேலைகளில் பங்கேற்காமல் இருப்பார்கள். இதன் மூலம் அவர்கள் […]

உள்ளூர் செய்திகள்

சீனாவும் பாகிஸ்தானும் கொண்டுவந்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை பிரிட்டன் நிராகரித்தது

  • Sep 17, 2025 - 05:57 AM
  • 0 Comments

ஜெனிவாவில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் திகதி ஜெனிவாவில் தொடங்கியது. தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து அதனைச் சார்ந்த விவாதமும் இடம்பெற்றது. இலங்கை தொடர்பில் ஏற்கனவே கால […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp