செய்திகள்

அனர்த்த நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இரவு 9.30 மணிவரை நடைபெறும்

  • Dec 4, 2024 - 09:05 AM
  • 0 Comments

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (4) மாலை. 05.30 மணி தொடக்கம் இன்று இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நேற்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன இதன் அடிப்படையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று (4) காலை 9.30 மணி முதல் இன்று மாலை […]

உள்ளூர் செய்திகள்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று!

  • Dec 3, 2024 - 09:48 AM
  • 0 Comments

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பாராளுமன்றம் […]

உள்ளூர் செய்திகள்

இன்று பதவியேற்கவுள்ள இலங்கையின் புதிய பிரதம நீதியரசர்.

  • Dec 2, 2024 - 10:17 AM
  • 0 Comments

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று (02) சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்ற நிலையில், முர்து பெர்னாண்டோ இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இவர், 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி […]

உள்ளூர் செய்திகள்

மீண்டும் வானிலையில் ஏற்பட்ட மாற்றம்.

  • Dec 2, 2024 - 10:05 AM
  • 0 Comments

வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும். வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக […]

உள்ளூர் செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!

  • Dec 2, 2024 - 07:12 AM
  • 0 Comments

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை ஃபெங்கல் புயல், நேற்று காலை 11.30 மணியளவில் வட தமிழகம் – புதுச்சேரி கரையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்ததது. ஃபெங்கல் புயல் காரணமாக இந்தியாவின் […]

செய்திகள்

ஜனாதிபதி அநுர சிறப்பாக செயற்படுகின்றார்- ரணில்

  • Dec 1, 2024 - 06:29 AM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அநுர அரசாங்கம் தொடர்ந்தும் இணக்கம் தெரிவித்து சேர்ந்து செயற்படுவதற்கு ஜனாதிபதியை பாராட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்க சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது முன்னாள் ஜனாதிபதி ரணில் […]

உள்ளூர்

தற்காலிக இடைத்தங்கல் நிலையங்களுக்கு அரச அதிபரின் கள விஜயம்

  • Dec 1, 2024 - 06:18 AM
  • 0 Comments

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் நேற்று (30) கேட்டறிந்துக்கொண்டார் யாழ்ப்பாணத்தின் கல்லுண்டாய் பிரதேச வெள்ள நிலமைகளை ஆய்வு செய்து கல்லுண்டாய் தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் கட்டடத்தில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடினார் அதன் போது உடனடியாக தீர்க்க கூடிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் வழங்கினார். இதன் போது அனர்த்தத்திற்கு அப்பால் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சனைக்கு, […]

உள்ளூர்

அந்தர் பெல்டி அடித்த செல்வம் அடைக்கலநாதன்

  • Nov 30, 2024 - 10:47 AM
  • 0 Comments

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதி வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அநுரகுமார பற்றி தேர்தலில் பலி சுமத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள்

இலங்கை வெளிவிவகார கொள்கையை சுயாதீனமாக கட்டமைக்க வேண்டும்- சீனா

  • Nov 29, 2024 - 01:08 PM
  • 0 Comments

இலங்கை வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது சுயாதீனமாக வெளிவிவகார கொள்கையை வடிவமைத்து அதனை பின்பற்ற வேண்டுமென என இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதார பிரச்சினையினை சில நாடுகள் தமது தேவைக்கு ஏற்றவிதமாக பயன்படுத்த முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார் இலங்கை சுதந்திரமான வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார் இலங்கை மக்கள் தங்களை குறித்து நம்பிக்கை கொண்டவர்களாகயிருக்கவேண்டும், என தெரிவித்த சீன […]

உள்ளூர்

கிளிநொச்சியில் சீரற்ற வானிலை தொடர்கின்றது

  • Nov 27, 2024 - 03:32 PM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி வட்டக்கச்சி பெரியகுளம் பகுதிகளில் வீதிகளை மூடியவாறு வெள்ள நீர் தேங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களுக்கு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.  

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp